ச்ச்ச.. இவ்வளவு ஆணாதிக்கமா? பாஸ்போர்ட் பெற கணவன் அனுமதி அவசியம் இல்லை.. ஐகோர்ட் உத்தரவு!!
பாஸ்போர்ட் பெறுவதற்கு கணவனின் கையெழுத்து அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆவணம். இது ஒருவரின் அடையாளத்தையும் தேசியத்தையும் சான்றளித்து, சர்வதேச பயணத்திற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கிறது. இந்தியாவில், பாஸ்போர்ட் வழங்கல் மற்றும் கட்டுப்பாடு, வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களால் கையாளப்படுகிறது.
பாஸ்போர்ட் பெறுவதற்கு பல்வேறு நடைமுறைகள் உள்ளன.பாஸ்போர்ட்டில் உங்கள் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் மற்றும் கையொப்பம் போன்ற அனைத்து அத்தியாவசிய தகவல்களும் அடங்கும். பாஸ்போர்ட் பெறுவதற்கு குடியுரிமைச் சான்று, முகவரி சான்று, பிறப்புச் சான்று உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் தேவைப்படும். இந்த நிலையில், திருமணமான பெண் ஒருவர், பாஸ்போர்ட் பெறுவதற்கு தன்னுடைய கணவனின் கையெழுத்து கட்டாயம் என்று வற்புறுத்துவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இதையும் படிங்க: மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!
தனது கணவனின் கையெழுத்தை பெற வற்புறுத்தாமல் பாஸ்போர்ட் வழங்க வலியுறுத்தி ரேவதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க கணவன் அனுமதியோ கையெழுத்தோ அவசியமில்லை என்று தெரிவித்தார்.
திருமணம் ஆகிவிட்டால் பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவதில்லை என்று கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், பாஸ்போர்ட் பெற கணவனின் கையெடுத்து வேண்டும் என்பது ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துவதாக கூறினார். எனவே, மனுதாரரின் விண்ணப்பத்தை நான்கு வாரங்களில் பரிசீலித்து பாஸ்போர்ட் வழங்க மண்டல அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கேடான திமுக ஆட்சிக்கு கூட்டாட்சி தத்துவம் கேடயமா..? பொங்கி எழுந்த டாக்டர் கிருஷ்ணசாமி..!