×
 

சீண்டி பாக்காதீங்க.. சாது மிரண்டால் காடு கொள்ளாது..! பவன் கல்யாண் எச்சரிக்கை..!

இந்து மதத்தை சீண்டி பார்க்காதீர்கள் என்றும் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்றும் பவன் கல்யாண் கூறியுள்ளார்.

மதுரை நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்துகொண்டார். விழா மேடையில் பேசிய அவர், முருகப்பெருமானுக்கு மதுரைக்கு வணக்கம் சொல்லி தனது உரையை தொடங்கினார். முருக பக்தர் மாநாட்டை நடத்தும் இந்து முன்னணிக்கும், இந்த முன்னணியின் தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் அவர்களுக்கும் கந்த சஷ்டி கவசத்தை இசைத்த ஒவ்வொருவருக்கும், மேடையில் உள்ள தலைவர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்.

தன்னை மதுரைக்கு வரவழைத்தது முருகர். என்னை வளர்த்தது முருகர். அந்த துணிச்சல் தந்தது முருகன் என்று கூறினார். மதுரைக்கு முருகனுக்கும் நெருக்கம் அதிகம்., முதல் அறுபடை வீடும், கடைசி அறுபடைவிடும் மதுரையில் தான் உள்ளன. மதுரை என்பதே மீனாட்சியம்மன் பட்டினம்., மீனாட்சி அம்மன் தாய் பார்வதி அம்சம்., எனவே முருகரும் தாயாரும் மதுரையில் தான் உள்ளார்கள்.

இதையும் படிங்க: முருக பக்தர்களாக வந்த நீங்கள் வீரபாகுவாக செல்ல வேண்டும்.. அண்ணாமலை ஃபயர் ஸ்பீச்..!

முருகனும் தந்தை சிவபெருமானும் முதல் சங்கத்துக்கு தலைமை ஏற்று இருந்தது மதுரையில் தான்m, எனவே இந்த மதுரையில் தயாரும் இருக்கிறார்., தந்தையும் இருக்கிறார்., மகனும் இருக்கிறார., அப்படி என்றால் மதுரை மக்கள் எவ்வளவு புண்ணியம் செய்து இருக்க வேண்டும். அந்த புண்ணியத்தின் விளைவாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவதரித்தார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரை தாழ் பணிந்து வணங்குகிறேன் என்று கூறினார்.

 நமது நாட்டு நம்பிக்கை அழிவில்லை., அதை யாராலும் அழிக்க முடியாது, நமது கலாச்சாரம் மிகவும் ஆழமானது, அழிக்க யாராலும் முடியாது என்றார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நமது அறம் ஆழமாக இருந்தது., அது என்றும் ஆழமாக இருக்கிறது., இனியும் ஆழமாக இருக்கும் இதுதான் இந்த தெய்வீக பூமியின் வரம் என்றார்.  எல்லோரையும் சமமாக பார்ப்பது அறம், தீயவர்களை வதம் செய்வது அறம், அதன் பெயர் புரட்சி, அதை செய்வது புரட்சித் தலைவர்.,உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகப்பெருமான் என்று பவன் கல்யாண் கூறினார். 

ஒரு கட்சித் தலைவர் கேட்கிறார்...முருகன் மாநாட்டை மட்டும் ஏன் தமிழ்நாட்டில் நடத்துகிறீர்கள் என்று. உத்தர பிரதேசத்திலும் அல்லது குஜராத்திலும் நடத்த வேண்டிய தான் என்று கேட்கிறார்., இதன் மூலம் பிரிவினை செய்ய பார்க்கிறார்கள்; இதே போல் சிலர் கநாளை சிவ பெருமானை பார்த்து கேட்கலாம்; அம்மனை பார்த்து கேட்கலாம்; இந்த சிந்தனை மிக மிக ஆபத்தானது. அரேபியாவில் இருந்து வந்த மதத்தைப் பார்த்து இதைக் கேட்க முடியுமா., இந்து மதத்தை சீண்டி பார்க்காதீர்கள் சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்று பவன் கல்யாண் மேடையில் உரையாற்றினார்.

இதையும் படிங்க: சொர்ணபுரியில் இருப்பது போல உணர்வு.. முருக பக்தர்கள் மாநாட்டில் நெகிழ்ந்து பேசிய நயினார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share