உலகத் தரத்தில் உருவாகும் பெரியார் உலகம்... ரூ.1.70 கோடி நிதியை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்...!
திருச்சியில் உருவாகும் பெரியார் உலகம் கட்டுமான பணிகளுக்கான நிதியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாட்டின் சமூக நீதி இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஈ.வி.ராமசாமி, பெரியார் அவர்களின் சிந்தனைகள் இன்றும் தமிழக அரசியல் மற்றும் சமூக அமைப்புகளை வடிவமைக்கின்றன. அவரது பிறந்தநாள் சமூகநீதி தினமாகக் கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டில், பெரியாரின் கருத்துக்களைப் பரப்பும் ஒரு புதிய அடையாளமாகத் திருச்சியில் 'பெரியார் உலகம்' அமைய உள்ளது.
சிறுகணூர் என்ற சிறிய ஊரில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் அருகில், 27 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பெரிய அளவிலான கல்வி-உற்சாக வசதிகள் கொண்ட இடம் உருவாக்கப்படுகிறது. இது வெறும் சிலை அல்ல, பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண்ணியம் போன்ற சிந்தனைகளைப் படமாக்கி, அடுத்த தலைமுறைகளுக்கு அறிவுரை வழங்கும் ஒரு உலகமாகும்.
2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரப் பாடசாலை எனும் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது. திருச்சி நகரத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறுகணூர், மத்திய மற்றும் தென் தமிழ்நாட்டின் முக்கிய இணைப்புப் பாதையில் இருப்பதால், இந்த இடம் லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கீழடி TO வாக்குத் திருட்டு... என்ன ஆணவம் இருக்கும்? மத்திய பாஜக அரசை கேள்விகளால் துளைத்த முதல்வர் ஸ்டாலின்...!
இந்த நிலையில் திருச்சியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்காக ரூபாய் 1. 70 கோடி நிதியை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். திராவிட கழகத் தலைவர் கி வீரமணியிடம் பெரியார் உலகத்திற்கான விதியை வழங்கியுள்ளார். 95 அடியில் தந்தை பெரியார் சிலை மற்றும் 60 அடி உயர பீடத்தில் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி கொடுத்த அல்வா தான் எல்லாம்... அதிமுக துண்டு துண்டா போச்சே! அமைச்சர் சேகர்பாபு பதிலடி...!