×
 

ஜெயலலிதா முதுகில் குத்திய OPS..! பியூஷ் கோயல் பகிரங்க குற்றச்சாட்டு..!!

Ops ஜெயலலிதா முதுகில் குத்திவிட்டதாக பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துவிட்டார். அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த நிகழ்வு, தமிழக அரசியல் களத்தை முற்றிலும் புரட்டிப்போட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே சில அறிகுறிகள் தெரிந்தன. ஓ.பி.எஸ். அண்ணா அறிவாலயத்திற்கு அருகில் இருந்த சட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலினைச் சந்தித்தபோது, "திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வலுவான வாய்ப்பு உள்ளது" என்று அவர் பகிரங்கமாகக் கூறியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதன் பிறகு அவரது ஆதரவாளர்கள் சிலர் திமுகவில் இணைந்தனர்.

அதிமுகவை ஒன்றிணைப்பேன் என கூறிவந்த ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவை தன்னை இணைத்துக் கொண்டார். ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. ஓபிஎஸ் எடுத்திருப்பது தவறான முடிவு என்று கருதி வருகின்றனர். 

இதனிடையே, மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். அவர் பேசுகையில், ஜெயலலிதா அவர்களின் முதுகில் குத்திய செயலை ஓபிஎஸ் செய்துவிட்டார் என்று குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: திருப்பூருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்..!! ஜவுளி துறைக்கு ZERO வரி..!! ஹேப்பி நியூஸ் சொன்ன அமெரிக்கா..!!

ஜெயலலிதா தனது கட்சியில் பிரிந்து சென்றவர்களைக்கூட மீண்டும் இணைத்து, அவர்களுக்கு மதிப்பும் அன்பும் அளித்து கட்சியை வழிநடத்தியவர் என்று நினைவுகூர்ந்தார். அத்தகைய தலைவரின் நம்பிக்கையையும் அன்பையும் ஓபிஎஸ் மீறியுள்ளார் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், திமுக ஆட்சியின் ஊழல் நிறைந்த செயல்பாடுகளை கடுமையாக சாடிய பியூஷ் கோயல், அத்தகைய ஆட்சியை மக்களுடன் இணைந்து அகற்றுவோம் என்ற உறுதியையும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... களமாடும் பாஜக..! அமித்ஷா, பியூஷ் கோயல் திருச்சி வருகை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share