×
 

பாமக MLA அருளை கொல்ல முயற்சி? அன்புமணி மீது பகிரங்க குற்றச்சாட்டு...!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தொடர்ந்து ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டு வரும் நிலையில் பிரச்சனை நீண்டு வருகிறது. இதற்கிடையில் பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாமக எம்.எல்.ஏ. அருள் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பேச சட்டமன்ற உறுப்பினர் அருள், அன்புமணி வாழ்க எனக் கூறி தங்கள் கார் மீது தாக்குதல் நடத்தியதாகவும் 15க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார்.

காரை விட்டு வெளியில் வந்திருந்தால் தான் கொல்லப்பட்டிருப்பேன் என்று கூறிய அவர், ஐந்து பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அருள் தெரிவித்தார். அராஜகத்தை கைகளில் எடுக்க வேண்டாம் என்றும் சிறந்த இளைஞர்களை தவறாக வழி நடத்தாதீர்கள் என்று அன்புமணிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: #SIR...! முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்... 21 கட்சிகள் புறக்கணிப்பு...!

தாங்கள் அய்யா ராமதாஸ் வழியில் அமைதியான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார். நாங்கள் அராஜகத்தை நம்புபவர்கள் அல்ல சட்டத்தை நம்புகிறோம் என்று கூறினார். மேலும், சட்டம் தன் கடமையை செய்யும் என்று தெரிவித்தார். அன்புமணி தரப்பினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து ராமதாஸ், ஜி. கே. மணி ஆகியோர் தொலைபேசியில் அழைத்து என்னிடம் பேசினர் என்று MLA அருள் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “வீரபாண்டியார் இன்று நம்முடன் இருந்தால்”... ஸ்டாலினுக்கு எதிராக வன்னியர்களை கொம்பு சீவிவிடும் அன்புமணி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share