PTR கொடுத்த பகீர் வாக்குமூலம்.. துவண்டு போன தொழில்துறை.. கொந்தளித்த அன்புமணி!!
ஆந்திரா, கர்நாடகா அளவுக்கு தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி அடையவில்லை என்ற அமைச்சரின் வாக்குமூலத்திற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
தொழிற்துறை வளர்ச்சியில் ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா போன்ற பிற தென் மாநிலங்கள் அளவுக்கு தமிழ்நாடு தீவிரம் காட்டவில்லை என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறி இருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இப்படி ஆந்திரா, கர்நாடகா அளவுக்கு தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சி அடையவில்லை என்று அமைச்சரே வாக்குமூலம் கொடுத்துள்ளதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார் என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் தொழில்துறையின் வளர்ச்சி பிற தென் மாநிலங்களை விட குறைவாக இருப்பதாக அமைச்சர் ஒருவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறிய அவர், மதுரையில் நடைபெற்ற புதுமதுரை 2023 என்ற தொலைநோக்குத் திட்டத்தின் ஆவணம், இலட்சினை ஆகியவற்றை வெளியிடுவதற்கான நிகழ்ச்சியில் பேசும் போது அமைச்சர் இதனை தெரிவித்து இருப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: ஒத்த வீடியோக்கு பத்து வருஷமா? பிஜேபிக்கு அவ்ளோ அக்கறை! ரோஸ்ட் செய்த முதல்வர்
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர், அண்மையில் சட்டப்பேரவையில் பேசும் போது, டைடல் பூங்காக்களை அமைப்பது குறித்து அறிவிக்கும் அதிகாரம் தமக்கு அளிக்கப்பக்வில்லை என்று கூறினார். தமிழகத்தில் 50 சதவீதம் மது பாட்டில்கள் வரி செலுத்தப்படாமல் விற்பனை செய்யப்படுவதாக வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார் என்பதை அன்புமணி சுட்டிக்காட்டி உள்ளார்.
நிதித்துறை அமைச்சராக இருந்த போது ஒரு தொலைபேசி உரையாடலில் , உதயநிதியும், சபரீசனும் ரூ.30 ஆயிரம் கோடி சேர்த்து விட்டனர் என்று கூறியதாக சர்ச்சைகள் வெடித்தன. எனவே, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்த அமைச்சரின் பேச்சை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தொழில்துறை தொடர்பான அமைச்சரின் இந்த பேச்சு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!