பாமக தலைவரா முகுந்தன் ? நல்ல செய்தி என சூசகமாக சொன்ன ராமதாஸ்...பரபர அரசியல்!
விரைவில் தொண்டர்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் நிலையில், பாமக மட்டும் நீயா நானா என்ற போட்டியில் உள்ளது. காரணம் யார் தலைவர் என்பதிலேயே அன்புமணிக்கும் ராமதாசுக்கும் மோதல்…
இப்படி இருக்க இருவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும், கட்சியை வளர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளும் கட்சி தொண்டர்களும் விரும்புகின்றனர். ஆனால் இருவரும் பேட்ச் அப் ஆகும் நிகழ்வு தொடர்பாக இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சில பேட்டிகளில் நல்ல செய்தி வரும் என்று மட்டும் ராமாதாஸ் கூறி வருகிறார். அப்படி என்ன தான் சொல்ல போகிறார் என்பதற்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ராமதாசுடன் முகுந்தன் திடீர் சந்திப்பு.. கட்சி பூசல் குறித்து ஆலோசனை?
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வயது என்பது என் மட்டுமே அரசியலுக்கு வயது கிடையாது என கூறினார். விரைவில் நல்ல செய்தி வரும் என்று மீண்டும் தெரிவித்த ராமதாஸ், இப்போது சொல்ல முடியாது என கூறினார். அமித்ஷாவை நான் நேரில் சந்தித்தது இல்லை என்றும் இருப்பினும் அவருக்கு வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்தார். தொண்டர்கள் எதிர்பார்த்த செய்தி விரைவில் வரும் என்ற நம்பிக்கை தெரிவித்த ராமதாஸ், கூட்டணி யாரோடு என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது என்றார்.
கூட்டணி என்பது தேசிய கட்சி அல்லது மாநில கட்சி என யாருடனும் இருக்கலாம் என்றும் விஜய் யாருடன் கூட்டணி என்பதை பற்றி ஜோசியம் கூற முடியாது என்றும் தெரிவித்தார். பாமக மீண்டும் பலமாக வரும் என்றும் சென்னையிலும் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தேன் மற்றும் முகுந்தன் மீண்டும் கட்சிக்குள் வர வாய்ப்பு இருக்கிறது., இருப்பினும் உறுதியாக கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கு பெருந்துரோகம் செய்கிறது திமுக அரசு.. கடுமையாக சாடிய அன்புமணி..!