×
 

தூத்துக்குடியில் அடுத்த அதிர்ச்சி... 7 வயது சிறுமி மர்ம கும்பலால் கடத்தல்... ஒரே மணி நேரத்தில் ஒட்டுமொத்த சீனையே மாற்றிய போலீஸ்...!

திருச்செந்தூர் அருகே இரவு நேரத்தில் காணாமல் போன 7 வயது சிறுமியை 1 மணி நேரத்தில் தேடி கண்டுபிடித்த காவல்துறையினர். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழி  அம்மாள்புரம் பகுதியை சேர்ந்த  பாலமுருகன், சரஸ்வதி, தம்பதியினர். இவர்கள்  தண்ணீர் பாட்டில்,  குளிர்பானங்கள் மொத்த வியாபாரம் செய்துவருகின்றனர்.  இவர்களது 7-வயது மகள் 2-ம் வகுப்பு பயின்றுவருகிறாள். இந்தநிலையில்  நேற்று இரவு 7 மணியளவில்  வீட்டின்  அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை காணவில்லை எனக்கூறி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தொடர்ந்து  DSP மகேஷ்குமார் தலைமையில் திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் மதுரை வீரன்,  ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் திலீபன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட  காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தி அருகிலுள்ள தோட்டம்,  சிறுமி விளையாடச்செல்லும் இடம் என பல்வேறு இடங்களில் தேடினர்.

அப்போது  சுமார் 1 மணி நேர தீவிர தேடுதலுக்கு பின் வீட்டிற்கு பின்புறம் இருள் சூழ்ந்த பகுதியில்  உள்ள கட்டுமானப் பணியிலிருந்த ஒரு வீட்டின் கதவிற்கு பின் நின்றிருந்த சிறுமியை காவல்துறையினர் மீட்டு அழைத்துவந்தனர். அப்போது சிறுமி தன்னை 4 பேர் சேர்ந்து தூக்கிச்சென்றதாக தெரிவித்ததால் காவல்துறையினரும் உறவினர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதையும் படிங்க: கடன் வாங்கித் தராத நபர் காரில் கடத்தல்... 2 நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை... 5 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

இதனையடுத்து காவல்துறையினர் பல்வேறு பகுதிகளிலும் அங்கிருந்தவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதுடன் அந்தப்பகுதியை சுற்றி தீவிர தேடினர். சந்தேகத்திற்கிடமாக. எதும் தெரியாததால் விளையாட சென்ற  குழந்தை பயத்தினால் உளறுவதாக கூறி  காவல்துறையினர் பெற்றோரை சமாதானம் செய்தனர்.  அப்போது  இளைஞர்கள் சிலர் சுற்றித்திரிவதாகவும் குழந்தையின் வார்த்தை உண்மையாகவும் இருக்கலாம் எனவும்  அங்கிருந்த பொதுமக்கள் புகார் அளித்தனர்.மேலும்  இதனையடுத்து இந்த சம்பவம்  குறித்து காவல்துறையினர் அதிக கவனம் கொண்டு  தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த சில நாட்களுக்கு முன் விளாத்திக்குளம்- பகுதியில்  இயற்கை உபாதை கழிக்க சென்ற 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டசம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீளாத காவல்துறையினர் குழந்தை காணாத புகாராலும் குழந்தை சொன்ன காரணத்தாலும்  பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 

இதனால் காவல்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் சிறுமியை தேடி கண்டுபிடித்து கொடுத்ததால் அந்தப் பகுதி மக்கள் போலீசார்களை சிறுமியை மீட்டதால் காவல்துறையினரை அந்தப் பகுதி மக்கள் பாராட்டினர். 

இதையும் படிங்க: #BREAKING: இந்திய கம்யூனிஸ்ட்க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு... தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share