×
 

வெளிய போ கூடாது.. எதையும் சொல்ல கூடாது..! பெண் போலீஸ் மிரட்டுவதாக சிறுமியின் தந்தை புகார்..!

வெளியில் போகக்கூடாது, எதையும் சொல்லக்கூடாது என பெண் போலீசார் மிரட்டுவதாக திருவள்ளூரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தந்தை புகார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரப்பாக்கத்தில் கடந்த சனிக்கிழமை 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு நபர் அவரை கடத்தி அருகிலுள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சிறுமி தப்பி, தனக்கு நேர்ந்த கொடுமையை பாட்டியிடம் தெரிவித்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காவல்துறையினர் ஏற்கனவே இரண்டு தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மேலும் மூன்று கூடுதல் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுமி தற்போது நலமாக இருப்பதாகவும், குற்றவாளியை கைது செய்ய தீவிர விசாரணை நடைபெறுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை விரைந்து பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை குற்றவாளியை கைது செய்யவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தாய் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இதையும் படிங்க: அது டீசல் ரசாயனம்.. பார்த்து கையாளுங்க! இபிஎஸ் எச்சரிக்கை..!

இதனால் பெண் போலீசார் தங்களை மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை புகார் தெரிவித்துள்ளார். வெளியில் செல்லக்கூடாது எதுவும் பேசக்கூடாது என பெண் போலீசார் தங்களை மிரட்டுவதாக கூறினார். மேலும் பெண் போலீசாரின் கெடுபிடி கண்டு சிகிச்சையில் இருக்கும் சிறுமி அஞ்சுவதாகவும் அவர் கூறினார். 

இதையும் படிங்க: பறிபோன பதவி...கை விரித்த தலைமை…புதிய கட்சி தொடங்கிய பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share