×
 

#BREAKING: 9 பேரும் குற்றவாளிகளே! பொள்ளாச்சி பாலியல் வழக்கின் அதிரடி தீர்ப்பு..!

நாடே எதிர்பார்த்து காத்திருந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் குற்றவாளிகளே என நீதிபதி அறிவித்துள்ளார்.

பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் தமிழ்நாடு அதிர்ந்தது. பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வீடியோ எடுத்து கொடூர செயலில் ஈடுபட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த ஒன்பது பேரை முக்கிய குற்றவாளிகளாக சிபிஐ அடையாளம் காட்டியது. பாதிக்கப்பட்ட பெண்களை எட்டு பேர் நேரடி சாட்சியம் அளித்த நிலையில் வயிறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வெளியானது. கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி வழக்கின் தீர்ப்பை அறிவித்தார்.

இதையும் படிங்க: நீதிபதி மாற்றத்தால் குழப்பம்..! பொள்ளாச்சி வழக்கில் திட்டமிட்டபடி மே 13-ல் தீர்ப்பு..!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. தீர்ப்பு விவரங்கள் நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிக்ஸர்களாக விளாசும் எடப்பாடியார்..! ஒரே வரியில் அவுட் ஆக்கிய ஜெ-வின் உதவியாளர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share