×
 

புதுச்சேரி அரசியலில் பரபரப்பு... தமிழகம் வந்த அமித்ஷாவுக்கு திடீர் ஷாக் கொடுத்த புதுவை முதல்வர்...!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாநாடு புறக்கணிப்பு

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார். துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கூடுதல் விவரங்களுடன் நமது செய்தியாளர் கிருஷ்ணா இணைந்துள்ளார். கிருஷ்ணா வணக்கம். விரிவான விவரங்களை வழங்கலாம்.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை. இந்த நிலையில், 31வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகிக்கிறார்.

இதையும் படிங்க: அந்த பக்கம் அமித் ஷா, இந்த பக்கம் டி.கே.எஸ்... ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பாரா விஜய்?... நாடே எதிர்பார்க்கும் தரமான சம்பவம்...!

இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

புதுச்சேரியைப் பொறுத்தவரை, அது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசம் என்பதால், தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக நிர்வாகியான துணைநிலை ஆளுநருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதலமைச்சர் ரங்கசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் உறுதி செய்துள்ளார். தற்போது அவர் சென்னைக்கு புறப்படத் தயாராகி வருகிறார்.

இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளார். துணைநிலை ஆளுநரும் மாநாட்டில் பங்கேற்கும் நிலையில், இருவரும் ஒரே கோரிக்கைகளையே முன்வைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால், தான் ஏன் தனியாகச் சென்று பேச வேண்டும் என்ற கருத்தை முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே புதுச்சேரியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து துணைநிலை ஆளுநர் முதலில் பேசுவார். அதன்பிறகு முதலமைச்சரும் அதே கோரிக்கைகளை முன்வைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால், துணைநிலை ஆளுநர் பேசிய பிறகு முதலமைச்சர் ஏன் பேச வேண்டும் என்ற முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, புதுச்சேரியில் ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. பாஜகவுக்கு அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.

தற்போது சபாநாயகர் தேர்விலும் இந்த இழுபறி நீடித்து வருகிறது. ஏற்கனவே முதலமைச்சர் ரங்கசாமிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இந்த மாநாட்டிற்கு துணைநிலை ஆளுநருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இருவரும் இணைந்து சென்று ஒரே கோரிக்கைகளைத்தான் முன்வைக்க வேண்டியிருக்கும் என்பதால், தான் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என முதலமைச்சர் ரங்கசாமி தரப்பில் அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: அரசு பள்ளி விடுதியில் அரங்கேறிய கொடூரம்... மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை... 2 பேர் கைது...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share