திருக்கோவிலூர் திகில்.. பொன்முடிக்கு பதற்றத்தைக் கொடுத்த உதயநிதி மூவ்..!
சில சீனியர்களுக்கு அடுத்த தேர்தலில் சீட் கிடையாதுன்னு இப்பவே அறிவாலயத்தில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கு
அரசியலில் வாய் தான் எல்லாத்திற்கும் ஆதாரம். வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்குகளை அள்ளுவது முதல் வாயைக் கொடுத்து வம்பு வாங்கிக் கொள்வது வரை வாயால் சாதித்த மற்றும் சரிந்த அரசியல்வாதிகள் ஏராளம். இதற்கு சமீபத்திய உதாரணம் என்றால் அது முன்னாள் அமைச்சர் பொன்முடி தான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். திமுகவில் சீனியர் அமைச்சர், முக்கிய துறை, முக்கிய பொறுப்பு என விழுப்புரத்தின் ராஜாவாக வலம் வந்தவர், சமயம் தொடர்பான சர்ச்சை கருத்துக்களால் சரிவை சந்தித்தார்.
சைவ, வைணவ மதம் குறித்து அவர் பேசிய கொச்சைக் கருத்தால் வலிமையான அமைச்சர் பதவி, திமுகவில் மாநில துணைச் செயலாளர் பதவி, மாவட்ட பொறுப்பு என அனைத்தையும் இழந்தார். குறிப்பாக அவருடைய முழு கட்டுப்பாட்டில் இருந்த விழுப்புரம் மாவட்டத்திலேயே உடன்பிறப்புகள் அவரது போட்டோ இல்லாமல் போஸ்டர் அடிக்கும் அளவிற்கு வந்துவிட்டார்கள். இப்போது பொன்முடிக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவருடைய திருக்கோவிலூர் சிட்டிங் எம்.எல்.ஏ. என்பது மட்டும் தான். இந்த வேதனை போதாது என்று, உதயநிதியால் பொன்முடிக்கு ஒரு மிகப்பெரிய சோதனை காத்திருப்பதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: திமுக பேனரில் புறக்கணிக்கப்பட்ட பொன்முடி... உள்ளூரிலேயே மரியாதை போச்சு!!
அதாவது சில சீனியர்களுக்கு அடுத்த தேர்தலில் சீட் கிடையாதுன்னு இப்பவே அறிவாலயத்தில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கு. இளம் தலைமுறைக்கு வாய்ப்பு தருவதற்காக 40க்கு மேற்பட்ட சீட்டுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருடைய கண்ட்ரோலில் திமுக தலைமை கொடுத்திருக்காங்க. அந்த டார்கெட் பட்டியலால் எங்கே நமது சீட் ஏதாவது நம்ம சீட் பறி போயிடுமோன்னு ஒரு பயம் பொன்முடிக்கு இருப்பதாக கூறப்படுகிறது. போதாக்குறைக்கு அந்த பட்டியலில் பொன்முடி பெயர் இருக்கவே செய்வதாகவும் சில உடன்பிறப்புகள் உறுதியாக கூறுகின்றனர்.
திருக்கோவிலூர் எம்.எல்.ஏ. ரேஸில் அடுத்ததாக பொன்முடியின் மகனான முன்னாள் எம்.பி.யான கெளதம் சிகாமணி இருக்கிறார். முன்னாள் எம்.பி. ஆதிசங்கருடைய மனைவி அஞ்சுகம், திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர் தங்கம் ஆகியோர் இருக்கிறார்கள். இதில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: திமுகவில் ஓரங்கட்டப்படும் பொன்முடி.. இனி அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி?