பொன்னேரி தவெகவுக்குள் “கும்மாங் குத்து”... தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்தது அதிரடி ஆக்ஷன்...!
தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கைகலப்பு விஸ்வரூபம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது
பொன்னேரி அருகே கோவில் திருவிழாவிற்கு பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பு புகாரின் பேரில் தவெக மாவட்ட இணை செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு. சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இருதரப்பு ஆளுங்கட்சியினர் மீது வழக்குப்பதிவு.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம் ஆலயத்தில் கடந்த 9ஆம் தேதி ஆடி மாத 4வது ஞாயிற்றுக்கிழமை 36ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த தீமிதி திருவிழாவை முன்னிட்டு பேனர் வைத்த போது தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இடையே தகராறு ஏற்பட்டு தாக்குதல் நடத்தியதாக கூறி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த இருதரப்பினர் ஒருவர் மீது மற்றொருவர் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், புகார் மனு பதிவு செய்யப்பட்டு இருதரப்பிற்கும் ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டு கடந்த 2நாட்களாக சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் உடன்பாடு ஏற்படாததால் இருதரப்பினர் மீது 3பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீஞ்சூர் நகர செயலாளர் சரண்ராஜ் அளித்த புகாரின் பேரில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட இணை செயலாளர் சிலம்பரசன், பொன்னேரி நகர செயலாளர் கோபி உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல மாவட்ட இணை செயலாளர் சிலம்பரசன் அளித்த புகாரின் பேரில் மீஞ்சூர் நகர செயலாளர் சரண்ராஜ், சுகுமார், ராம், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பிரபு, பாபு ஆகிய 5 பேர் மீதும் பொன்னேரி காவல்துறையினர் 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளும் கட்சியினர் என்பதால் இருதரப்பினர் சமாதானம் செய்யும் முயற்சியில் உடன்பாடு ஏற்படாததால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாமா... வேண்டாமா.? சிங்கப் பெண் படை என்ன பண்ணுது.? வேல்முருகன் ஆவேசம்.!!
நடந்தது என்ன?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆடி மாத 4வது ஞாயிற்றுக்கிழமை 36 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. இந்த தீமிதி திருவிழாவை முன்னிட்டு அரசியல் கட்சியினர், கிராம மக்கள் என பல தரப்பினர் பேனர்களை வைத்துள்ளனர். இந்த நிலையில் திருவிழாவிற்கு பேனர் வைத்த போது தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இடையே தகராறு ஏற்பட்டு தாக்குதல் நடத்தியதாக கூறி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீமிதி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்குவதற்காக பேனர் வைத்ததாகவும், அப்போது அங்கு வந்த தமிழக வெற்றிக் கழக திருவள்ளூர் வடக்கு மாவட்ட இணை செயலாளர் சிலம்பரசன் தலைமையிலான குழுவினர் தகராறில் ஈடுபட்டதாகவும், மாவட்ட இணைச்செயலாளரான தனது புகைப்படத்தை பேனரில் போடாமல், மாவட்ட செயலாளர் விஜயகுமார் புகைப்படத்தை மட்டுமே போட்டது ஏன் எனக்கூறி தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்டதாக மீஞ்சூர் நகர செயலாளர் சரண்ராஜ் புகார் தெரிவித்துள்ளார்.
தங்களது சார்பில் வைக்கப்பட்ட பேனரை கிழித்து சேதப்படுத்தியது மட்டுமின்றி மாவட்ட இணை செயலாளர் சிலம்பரசன், நகர செயலாளர் கோபி தலைமையிலான கும்பல் தங்களை கொடூரமாக தாக்கியதால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர். இது தொடர்பாக காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் மாவட்ட இணை செயலாளர் சிலம்பரசன், நகர செயலாளர் கோபி உள்ளிட்டோர் மீது பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே அனுமதியின்றி வெளியூரை சேர்ந்த நபர்கள் பேனர் வைத்ததாகவும் அவர்களை தட்டி கேட்டபோது தகராறு எழுந்ததாக ஆலய நிர்வாகிகள் தரப்பிலும் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினர் அளித்த புகார்கள் மீது பொன்னேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பொன்னேரி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தாய்ப்பால் வார விழாவில் பங்கேற்க வந்த பொன்னேரி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ ரவியை பாதிக்கப்பட்ட தரப்பினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேனர் வைக்க வந்த கட்சியினர் மீது சொந்த கட்சியினரே தாக்குதல் நடத்துவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
அப்போது மருத்துவமனையில் எந்த பிரச்சனையும் வேண்டாம் எனது அலுவலகத்திற்கு வாருங்கள் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என அவர்களிடம் கூறி எம்எல்ஏ ரவி அங்கிருந்து நழுவி சென்றார். பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கைகலப்பு விஸ்வரூபம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: அடங்கா ஆணவம் அழிவுக்கு வழி..! அமைச்சர் ஆதவிற்கு நயினார் தாக்கு..!!