×
 

ஆள்கடத்தல் வழக்கு! முன்ஜாமின் கேட்ட ஜெகன் மூர்த்தி MLA நீதிமன்றத்தில் ஆஜர்.. பதற்றம்! பரபரப்பு!

சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ முன் ஜாமின் கோரி இருந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ஜெகன் மூர்த்தி புரட்சி பாரதம் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். 2006இல் அரக்கோணம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட அவர், 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 2021இல் கே.வி.குப்பம் தொகுதியில் வெற்றி பெற்றார். கே.வி.குப்பம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 

இந்த நிலையில், காதல் திருமணம் செய்து வைத்தது தொடர்பான ஆள் கடத்தல் வழக்கு குறித்து விசாரிப்பதற்காக போலீசார் சென்றனர். இதன் காரணமாக 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தி வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். இதனால் ஜெகன் மூர்த்தியின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

சென்னை ஆண்டரசன் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் விசாரித்து வந்த நிலையில் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்று வருகிறது.

வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் நிலையில் பிற்பகல் இரண்டு முப்பது மணி அளவில் ஜெகன் மூர்த்தி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். மேலும் கடத்தலுக்கு துணையாக இருந்ததாக ஏடிஜிபி ஜெயராமனும் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சுமார் 3.30 மணி அளவில் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ நீதிமன்றத்தில் ஆஜரானார். மனு மீதான விசாரணையின் போது, கூலிப்படையினரை வைத்து கடத்தலில் ஈடுபட்டதாக காவல்துறை கூறுவது தவறு என்று ஜகன்முதி தரப்பில் வாதிடப்பட்டது. கூலிப்படையினர் யாரும் கடத்தலில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share