×
 

உங்க வீட்டு பொம்பளைங்கள கேட்டா ஒத்துப்பீங்களா? நயன்தாராவை கேட்ட சி.வி. சண்முகத்துக்கு பிரேமலதா பதிலடி..!

பெண்களை இழிவு படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்ட "உங்க கனவை சொல்லுங்க" திட்டம், தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 1.91 கோடி குடும்பங்களை நேரடியாக அணுகி, அவர்களின் தனிப்பட்ட கனவுகள், எதிர்கால எதிர்பார்ப்புகள், தேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த கருத்துகளை சேகரிக்கும் ஒரு பெரிய அளவிலான மக்கள் தொடர்பு முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் 50,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று சிறப்பு படிவங்களை நிரப்பி, மொபைல் செயலி மூலம் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்துவமான "கனவு அட்டை" வழங்கப்பட்டு, அதன் மூலம் கோரிக்கைகளின் நிலையை இணையதளத்தில் தெரிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2030-ஆம் ஆண்டுக்குள் மக்களின் பெரும்பாலான கனவுகளை நிறைவேற்றுவதற்கு திராவிட மாடல் அரசு பாடுபடும் என முதலமைச்சர் உறுதியளித்தார். இந்த திட்டத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சனம் செய்து பேசி இருந்தார். அப்போது தனக்கு நயன்தாரா வேண்டும்., அதனை முதல்வர் நிறைவேற்றுவாரா என்று நக்கலாக பேசி இருந்தார்.

இதையும் படிங்க: தேமுதிக வேட்பாளர் நேர்காணல்.... பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் விறுவிறுப்பான வேட்பாளர் தேர்வு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கண்டனங்கள் எழுந்த நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்தார். எந்த கட்சியாக இருந்தாலும், எந்த மதமாக, சாதியாக இருந்தாலும் சரி பெண்களை இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். பெண்களை இழிவு படுத்துபவர்கள் கண்டிக்க கூடியவர்கள் என்று கூறியுள்ளார். அது நடிகையாக இருந்தாலும் சரி சாதாரண பெண்மணிகளாக இருந்தாலும் சரி பெண்களை இழிவு படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார். உங்கள் வீட்டுப் பெண்களை பேசினால் அமைதியாக இருப்பீர்களா என்று கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: 50 நாட்கள் பொறுமையாக இருங்க... எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக-விற்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share