ஸ்டாலினை பாஜகவால் பணிய வைக்கவே முடியாது..! ராகுல் காந்தி திட்டவட்டம்..!
திருச்சி மாவட்டம் துறையூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பரப்புரவு மேற்கொண்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் ஒரு சில நாள்கள் மட்டுமே இருப்பதால், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிரடி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன.
ஏப்ரல் 21 மாலையுடன் தேர்தல் பரப்புரையை முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால், பல கட்சித் தலைவர்களும், அக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களும் தமிழ்நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் துறையூரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரப்புரை நடத்தினார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி இந்த தேர்தலை பயன்படுத்தி பாஜக ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் நுழைய முயற்சிப்பதாக தெரிவித்தார். தமிழ் மொழி அடையாளம் சித்தாந்தத்தை அளிக்க பாஜக தொடர்ந்து முயற்சிப்பதாக தெரிவித்தார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் ஒன்பது பேரை ஆதரித்து ராகுல்வது இந்த பிரச்சாரத்தை மேற்கொண்ட போது ஊழல் புகாரால் பாஜகவிடம் அதிமுக சரணடைந்ததாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ட்ரம்புக்கு மோடி.. அமித்ஷாவுக்கு எடப்பாடி..! டெல்லியிலிருந்து ஆள நினைக்கிறாங்க..! ராகுல் காந்தி விளாசல்..!
இந்தத் தேர்தலை பயன்படுத்தி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டிற்கு நுழைய முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். கைப்பாவை போன்ற முதலமைச்சரை கொண்டு வர பாஜக நினைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இன்று இருக்கும் அதிமுக பாஜகவின் முகமூடி போல் செயல்படுவதாக தெரிவித்துள்ளார். ஸ்டாலினை மிரட்டவோ பணிய வைக்கவோ பாஜகவால் முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். கொள்கையில் ஒருபோதும் ஸ்டாலின் சமரசம் செய்து கொள்ள மாட்டார் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பெரிய சிக்கலில் ராகுல்காந்தி! FIR போட்டு விசாரிங்க! அதிரடி காட்டிய அலகாபாத் ஹைகோர்ட்!