#RED ALERT: கோவை, நீலகிரிக்கு அதிகனமழை பெய்யும்...எச்சரிக்கும் வானிலை மையம்!
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வருவதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு வருகிறது. மீண்டும் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு வானிலை மையம் இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: பயமுறுத்தும் பேய் மழை..! 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..!
திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 29, 30 ஆம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய ஆறு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்ன வானிலை மையம் தெரிவித்துள்ளது..
இதையும் படிங்க: கோவை, நீலகிரிக்கு அதீத கனமழை எச்சரிக்கை! அவசியமின்றி வெளியே போகாதீங்க மக்களே!