×
 

ஜில்லுனு ஒரு கிளைமேட்.. சென்னையில் செம மழை! மக்கள் நிம்மதி..!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் கோயம்பேடு, மதுரவாயல், நிற்குன்றம், வளசரவாக்கம், வானகரம், போரூர், ஐயப்பன் தாங்கல் மற்றும் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, நஸரத் பேட்டை, திருவேற்காடு, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, தேனி ஆகிய 21 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: காலையிலே அதிரடி... இந்த 17 மாவட்டங்கள் தான் குறி...! 

மேலும் வரும் 10 ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் 11 ஆம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், நீலகிரி, கோவையில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மக்களே பாதுகாப்பா இருங்க..! வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு நிலை.. புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share