×
 

சிங்கப்பெண்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷம்..! டென்ஷன்-ஆன அமைச்சர் ராஜ்மோகன்..!!

சிங்கப் பெண் படை தொடர்பாக விமர்சனம் முன் வைத்தவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் உருவாக்கப்பட்ட இந்த சிறப்புப் படை, அதிநவீன வசதிகள், ரோந்து வாகனங்கள், உடல் கேமராக்கள் உள்ளிட்ட கருவிகளுடன் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது.

மாநிலம் முழுவதும் 500 குழுக்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம், பெண்கள் பாதுகாப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் என தவெக அரசு நம்பிக்கை தெரிவித்தது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுகவின் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். திட்டத்தின் அறிமுக விழா மே 29 அல்லது அதற்கு அருகில் தொடங்க இருந்த நிலையில், அது திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஒத்திவைப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது அரசின் முன்னுரிமையை கேள்விக்குள்ளாக்கியது மற்றும் பெண்கள் பாதுகாப்பை அரசியல் சூழ்ச்சியாகப் பயன்படுத்துவதாக விமர்சிக்கப்பட்டது. தொடர்ந்து சிங்கப் பெண் படைத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட போதிலும் பல்வேறு குற்ற சம்பவங்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நிகழ்வதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இன்று சட்டமன்றத்திலும் அதே பிரச்சனை வெடித்தது. சிங்கப்பெண்கள் படை குறித்து அமைச்சர ராஜ்மோகன் கருத்து தெரிவித்தார்.

இதையும் படிங்க: எந்த ஸ்கூலையும் இனி PT Period கட் ஆகாது..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

சிங்கப்பெண்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷம் என்றும் அவர்கள் குறித்து இனி யாராவது தவறாக பேசினால்… என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த சோபா கதையை எப்போ தான் விடுவீங்க என்று கேட்டுள்ள அமைச்சர் ராஜ்மோகன், கூட்டணி கட்சியினர் யாரையும் உங்களை போல் பிளாஸ்டிக் சேர் போட்டு நாங்கள் சிறுமைப்படுத்தவில்லை என விமர்சித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து பேசும் தி.மு.கவினருக்கு அண்ணா பல்கலைக்கழகம் நினைவுக்கு வரவில்லையா..? என்றும் யார் அந்த மேலிடம் என்று கேட்பவர்களுக்கு யார் அந்த சார் என்று நினைவுக்கு வரவில்லையா..? என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கேட்டுள்ளார். 

இதையும் படிங்க: 3 செய்தி டிவி சேனல் ஒளிபரப்பு நிறுத்தம்?! என்ன நடந்தது? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share