×
 

"ஒரு அக்கா ஸ்தானத்துல"...! சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா... வரிந்துக்கட்டி பேசிய ராஜ்மோகன்..!!

அமைச்சர் கீர்த்தனா செயல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எஸ். கீர்த்தனா, சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்தச் சம்பவம் வீடியோவாகப் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆய்வின்போது பள்ளியின் சமையலறை, கழிவறைகள் உள்ளிட்ட வசதிகளைப் பார்வையிட்ட அமைச்சர் கீர்த்தனா, மாணவிகளுடன் உரையாடினார். ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டபோது ஒரு மாணவி தயக்கத்துடன் பதிலளிக்கத் திணறினார். அவரது தந்தையின் தொழில் குறித்து கேட்டபோது சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பின்னர், வகுப்பில் “லாஸ்ட் பெஞ்ச்” மாணவர்கள் குறித்து பேசி, ஆசிரியர்களுக்கு மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்களை நடத்த அறிவுறுத்தினார். கணினி அறையில் பயன்படுத்தப்படாத கணினிகள் மீதான தூசு குறித்தும் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ வைரலான நிலையில் கடும் விமர்சனம் எழுந்தது. திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட பல்வேறு

இதையும் படிங்க: ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? கொந்தளித்த சீமான்..!!

அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதையடுத்து நானும் அரசு பள்ளி மாணவி தான் என்று அவர் விளக்கம் கொடுத்தார். இந்த நிலையில் அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜ்மோகன் கருத்து தெரிவித்துள்ளார். "ஒரு அக்கா ஸ்தானத்துல இருந்து தான் அவங்க அதை பேசுனாங்க.. யாரும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்… என்று கூறியுள்ளார். அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளியில் ஆய்வு செய்தது சர்ச்சையான நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார். 

இதையும் படிங்க: சிங்கப்பெண்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷம்..! டென்ஷன்-ஆன அமைச்சர் ராஜ்மோகன்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share