×
 

‘ராஜினாமா செய்’.. போன் செய்து மிரட்டிய அன்புமணி.. பகீர் கிளப்பிய ராமதாஸ்..!

பாமகவினர் மத்தியில் பரிதாபம் தேட நினைப்பதாகவும், அவரை 35 வயதிலேயே மத்திய அமைச்சராக்கி தான் தவறு செய்துவிட்டதாகவும் ராமதாஸ் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாமகவில் அப்பா- மகன் இடையிலான பதவி மோதல் உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது. தற்போது தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், அன்புமணி செய்த பல்வேறு தவறுகள் குறித்து பகீர் கிளப்பும் விஷயங்களை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக அன்புமணி தவறு செய்து விட்டது, பாமகவினர் மத்தியில் பரிதாபம் தேட நினைப்பதாகவும், அவரை 35 வயதிலேயே மத்திய அமைச்சராக்கி தான் தவறு செய்துவிட்டதாகவும் ராமதாஸ் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

கேள்விக்கணைகள் தொடுத்த ராமதாஸ்: 

தற்போது முகுந்தன் மற்றும் ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம். தமிழ் குமரனின் நியமன விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் எப்படியெல்லாம் நடந்து கொண்டார் என ராமதாஸ் தெரிவித்துள்ளது பாமகவினரை கடும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதையும் படிங்க: அன்புமணியை மத்திய அமைச்சராக்கியதே தவறு - பொங்கியெழுந்த ராமதாஸ் - பாமகவில் பரபரப்பு...!

பனையூரில் அலுவலகம் திறந்து இருக்கிறேன் என தொலைபேசி எண்ணை தந்து, நீங்கள் இனி என்னை அங்கு வந்து பார்க்கலாம் என அன்புமணி சொன்னது சரியான செயலா? என்றும், நான்கு சுவற்றுக்குள் பேசி முடிக்க வேண்டியதை நடுவிதிக்கு கொண்டு வந்தது யார்? என்றும், அழகான, ஆள் உயர கட்சியான பாமகவை ஒரு நொடியில் உடைத்தது யார்?  என்றும் அன்புமணியை நோக்கி அடுத்தடுத்து கேள்விக் கணைகளை தொடுத்துள்ளார். 

தமிழ் குமரனுக்கு மிரட்டல்: 

கடந்த 45 ஆண்டுகளாக இந்த இயக்கத்தை அண்ணா சொன்னது போல கடமை கண்ணியம் கட்டுப்பாட்டோடு நடத்தி வந்தேன். அதற்கு அன்புமணி களங்கம் ஏற்படுத்தி விட்டார். எதிர்மறையாளர்களால் எத்தனையோ விதி சொற்களையும் ஏளனங்களையும் இந்த உவமை ஜனங்களுக்காக தாங்கிக் கொண்டவன் நான். ஆனால் வளர்த்த கடாவே மார்பில் வீறுகொண்டு பாய்ந்ததில் நான் நிலைகுலைந்து போய்விட்டேன் என வருத்தம் தெரிவித்துள்ளார். 

அன்புமணி தொடர்ந்து கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை செய்து வந்தார். பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரனை இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள சொன்னேன். தமிழ் குமரனுக்கு நியமன கடிதம் வழங்கினேன் அதை உடனே கிழித்து போட்டுவிட்டு, பதவியை ராஜினாமா செய் என அன்புமணி தொலைபேசியில் கூறியுள்ளார். கட்சியின் பொது குழுவில் பங்கேற்க மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்த தமிழ் குமரனை, அந்த கூட்டத்தில் பங்கேற்க கூடாது என காலை எனக்கு அலைபேசியில் கூப்பிட்டு அன்புமணி பேசினார்.

இதை கேட்டு அந்த குடும்பம் எவ்வளவு கலங்கி அவமானப்பட்டு இருக்கும்?, மேடையில் அல்ல, எதிர் வரிசையில் ஒரு ஓரமாக தமிழ் குமரனை அமர வைக்க கூட அன்புமணி அனுமதிக்கவில்லை என மன வேதனையுடன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். 

முகுந்தன் நியமனத்திற்கு எதிர்ப்பு: 

வீட்டில் எனக்கு உதவியாகவும், கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் இளைஞர் அணி தலைவராக முகுந்தனை நியமித்து அறிவிப்பு வெளியிட்டேன். சுவற்றில் வீசிய பந்து போல உடனே மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது சரியான செயலா?, மேடை நாகரிகம் சிறிதுமின்றி அனைவரின் முன்பும் காலை ஆட்டிக் கொண்டிருந்ததும், மைக்கை தூக்கி என் தலையில் போடாத குறையாக டேபிளில் வீசியது சரியான செயலா?  என அடுத்தடுத்து ராமதாஸ் குற்றச்சாட்டுக்களை அன்புமணி மீது அடுக்கியுள்ளது பாமகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

இதையும் படிங்க: வளர்த்த கடா மார்பில் பாய்கிறது..! அன்புமணிக்கு பாடம் புகட்டிய ராமதாஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share