விரைவில் புதிய ரேஷன் கார்டுகள்..! வேகம் எடுக்கும் பணிகள்..! உணவுத்துறை அதிரடி உத்தரவு..!
நிலுவையில் உள்ள ரேஷன் அட்டை வழங்கும் பணியை மும்முரமாக உணவுத்துறை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நிலுவையில் உள்ள சுமார் 4.14 லட்சம் ரேஷன் கார்டு தொடர்பான விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலித்து தகுதியானவர்களுக்கு உடனடியாக அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் பி. வெங்கட்ராமன் சமீபத்தில் எழிலகத்தில் உள்ள துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டபோது முக்கிய அறிவிப்பு வெளியிட்டார்.
மாநிலம் முழுவதும் தற்போது சுமார் 2.22 கோடி செயல்பாட்டில் உள்ள குடும்ப ரேஷன் கார்டுகள் உள்ளன. 2021 மே மாதம் முதல் 2025 டிசம்பர் வரை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய விண்ணப்பங்கள், பிரிவு மாற்றங்கள், திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளன. குறிப்பாக மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களைப் பயன்படுத்த விரும்பும் பல குடும்பங்கள் புதிய கார்டுக்கு விண்ணப்பித்துள்ளதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அமைச்சர் வெங்கட்ராமன் துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர், தகுதியான அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் மிக விரைவில் ரேஷன் அட்டைகள் வழங்க உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி துறை ஊழியர்களின் கோரிக்கைகளையும் விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் பல முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!
இந்த நடவடிக்கை மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பொங்கல் போன்ற பண்டிகை நிவாரணங்களையும் உரிய நேரத்தில் பெற உதவும். நிலுவையில் உள்ள சுமார் 4 லட்சம் ரேஷன் கார்டுகளை விரைந்து வழங்க உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் விரைவில் ரேஷன் அட்டை விநியோகம் செய்ய உணவுத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "விஜய் அரசு பாரபட்ச மனநிலையை விட வேண்டும்" சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!