மன்னார்குடியில் ரணகளம்! ஆர்.பி. உதயகுமார் உருவ பொம்மை எரிப்பு.. கொந்தளித்த திமுகவினர்..!
அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஆர்.பி. உதயகுமார் உருவ பொம்மையை மன்னார்குடியில் திமுகவின் அதிகரித்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
கீழடி விவகாரம் தொடர்பாக திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் வாயை திறந்து பேசுங்கள் பழனிச்சாமி என்றும் பல்லாயிரமாண்டு வரலாறுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும் போர்குரல் எழுப்பிவரும் நிலையில், தினமும் அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை அரசியல் செய்து வரும் பழனிசாமியின் கண்களுக்கு இதெல்லாம் தெரியவில்லையா அல்லது எஜமானர் பழைய வழக்குகளையெல்லாம் தூசிதட்டி எடுத்துவிடுவார் என்ற பயமா என்றும் அதிகாரப்பூர்வ பக்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.
அது மட்டும் அல்லாமல், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அரைகுறை ஆடையில் இருப்பது போன்ற ஒரு போஸ்டரை தயாரித்து கீழடியாவது, தாய்மடியாவது நமக்கு எப்பவுமே டாடி மோடி மடிதான் என்று வாசகங்களை எழுதி வெளியிட்டனர்.
இதையும் படிங்க: காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!
இந்த கார்ட்டூன் விவகாரம் அதிமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் TRB ராஜாவுக்கும், திமுக ஐடி விங்- க்கும் கடும் கண்டனங்களை கூறி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து வெளியிடப்பட்ட கார்ட்டூனை சுட்டிக்காட்டி தமிழகத்தில் TRB ராஜா நடமாட முடியாத அளவுக்கு முற்றுகையிடுவோம் என்று முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார் பகிரங்கமாக எச்சரிக்கை எச்சரித்தார்.
கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால் முதலில் குரல் கொடுப்பது அதிமுக தான் என்றும் கீழடி விவகாரத்தில் தேர்வு எழுதாமல் வெற்றி பெற திமுக முயல்கிறது என்றும் குற்றம்சாட்டினார். டி. ஆர். பாலு, டி.ஆர்.பி. ராஜா, அப்பா ஸ்டாலின் என யார் வேண்டுமானாலும் வரட்டும் கீழடி குறித்து விவாதிக்க தயார் எனவும் அவர் சவால் விடுத்தார்.
இந்த நிலையில் டிஆர்பி ராஜாவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த ஆர்.பி. உதயகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது உருவ பொம்மை எரிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆர்பி உதயகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அவரது உருவ பொம்மை எரித்தனர். தொடர்ந்து கண்டனம் முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினார்கள். இதனால் நாங்க பதட்டமான சூழல் நிலவியது.
இதையும் படிங்க: திமுகவிடம் விசிக 15 தொகுதிகளை கேட்கிறதா? அவருக்கு யாரு சொன்னா? நயினார் கருத்துக்கு வன்னி அரசு பதிலடி!!