அமித்ஷாவே சொல்லிட்டாரு.. அப்புறம் என்ன? மறுப்பு சொல்லாமல் மழுப்பிய மாஜி அமைச்சர்..!
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின் கருத்துக்கு மறுப்பு கூறாமல் ஆர். பி. உதயகுமார் மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பலமுறை தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. உடனான கூட்டணியை உறுதிப்படுத்திய அவர், இந்தக் கூட்டணி தி.மு.க.வை தோற்கடிக்கும் எனவும், ஊழலற்ற ஆட்சியை வழங்கி தமிழகத்தின் பெருமையை மீட்டெடுக்கும் எனவும் கூறியுள்ளார்.
சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி, கூட்டணி முடிவை அமித்ஷா உறுதிபடுத்தினார். இருப்பினும், சில அமித்ஷா "கூட்டணி ஆட்சி" என்று குறிப்பிட்டதாகவும், இது தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாகவும் மாறியது.
இதையும் படிங்க: போலீசுக்கு போனா 3 சாவு விழும்.. ரூ.1 கோடி கேட்டு மாஜி அமைச்சருக்கு கொலை மிரட்டல்!
ஆனால், எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா "கூட்டணி ஆட்சி" என்று கூறவில்லை, மாறாக NDA ஆட்சி அமைக்கும் என்று மட்டுமே கூறினார் என விளக்கமளித்தார். கூட்டணி ஆட்சி என்பது பற்றி வீண் கருத்துகளை பகிரக்கூடாது என்றும் அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை கூறி இருந்தார்.
கூட்டணி ஆட்சியா கூட்டாட்சியா என்ற விவாதம் முற்றுப்பெறாத நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமாரின் செய்தியாளர் சந்திப்பில் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அவரோ 2026இல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமையும் என்று கூறினார். கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறியது பற்றி கேட்டதற்கு, மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் மழுப்பலாக பேசி அங்கிருந்து புறப்பட்டார்.
இதையும் படிங்க: அதிமுக மாஜி. அமைச்சர் வீட்டில் ரெய்டு.. காலை முதலே லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..!