தமிழ்நாட்டுல TRB ராஜா நடமாட முடியாது.. ஆர். பி. உதயகுமார் பகிரங்க எச்சரிக்கை..!
அமைச்சர் TRB ராஜா தமிழகத்தில் நடமாட முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கீழடி விவகாரம் தொடர்பாக திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவு ஒன்று போடப்பட்டது. அதில், வாயை திறந்து பேசுங்கள் பழனிச்சாமி என்றும் பல்லாயிரமாண்டு வரலாறுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும் போர்குரல் எழுப்பிவரும் நிலையில், தினமும் அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை அரசியல் செய்து வரும் பழனிசாமியின் கண்களுக்கு இதெல்லாம் தெரியவில்லையா? இல்லை எஜமானர் பழைய வழக்குகளையெல்லாம் தூசிதட்டி எடுத்துவிடுவார் என்ற பயமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.
அது மட்டும் அல்லாமல், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அரைகுறை ஆடையில் இருப்பது போன்ற ஒரு போஸ்டரை தயாரித்து கீழடியாவது, தாய்மடியாவது நமக்கு எப்பவுமே டாடி மோடி மடிதான் என்று வாசகங்களை எழுதி வெளியிட்டனர்.
இதையும் படிங்க: அமித்ஷாவே சொல்லிட்டாரு.. அப்புறம் என்ன? மறுப்பு சொல்லாமல் மழுப்பிய மாஜி அமைச்சர்..!
இந்த கார்ட்டூன் விவகாரம் அதிமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் TRB ராஜாவுக்கும், திமுக ஐடி விங்- க்கும் கடும் கண்டனங்களை கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாது கீழடி அகழாய்வுக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து வெளியிடப்பட்ட கார்ட்டூனை சுட்டிக்காட்டி முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார் எச்சரித்து உள்ளார். தமிழகத்தில் TRB ராஜா நடமாட முடியாத அளவுக்கு முற்றுகையிடுவோம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கீழடி விவகாரத்தில் எடப்பாடியை விமர்சித்து திமுக ஐடி விங் வெளியிட்ட கார்டூனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், கீழடி அகழாய்வுக்கு நிதி ஒதுக்கியது அதிமுக ஆட்சி தான் என்று விளக்கினார். கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால் முதலில் குரல் கொடுப்பது அதிமுக தான் என்றும் கீழடி விவகாரத்தில் தேர்வு எழுதாமல் வெற்றி பெற திமுக முயல்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு கேட்கும் தரவுகளை கொடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்று கூறிய அவர், வருங்காலத்தில் யாரும் குறை சொல்லாத அளவுக்கு தரவுகளை கொடுக்க வேண்டும் என்றும் டி. ஆர். பாலு, டி.ஆர்.பி. ராஜா, அப்பா ஸ்டாலின் என யார் வேண்டுமானாலும் வரட்டும் கீழடி குறித்து விவாதிக்க தயார் என சவால் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அரைகுறையாக இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…