×
 

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அறை வாசலில் சிவப்பு துணி.. நம்பிக்கையா, அரசியல் நெருக்கடியா?

ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டுக்கு கட்சியில் அதிக மரியாதை இருப்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அறையின் முன்பாக ஒரு சிவப்புத் துணி தொங்கவிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இது அலுவலக வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை திட்டம், மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு, விவசாயிகள் பாசனப் பிரச்சினை உள்ளிட்ட தொடர்ச்சியான சிக்கல்கள் காரணமாக அமைச்சர் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது இஷ்ட தெய்வமான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இருந்து மந்திரித்து சிறப்புப் பூஜை செய்து கொண்டு வரப்பட்ட துணிதான் அது என அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசில் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் ஜோதிடம், மாந்தீரீகம் ஆகியவற்றில் நம்பிக்கை வைத்திருப்பது அறியப்பட்ட விஷயம். வெள்ளிக்கிழமைகளில் பாரம்பரிய உடையில் வருவது, நல்ல நேரத்தைப் பார்த்து செயல்பாடுகளை மேற்கொள்வது, அலுவலக மாற்றங்கள் போன்றவை தொடர்கின்றன. ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டுக்கு கட்சியில் அதிக மரியாதை இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: வெறும் ₹1.75 லட்சத்தில் எம்.எல்.ஏ ஆன ஒரே கட்சி தவெக தான்! மதுராந்தகத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பெருமிதம்!

அமைச்சர் ஆனந்தும் இதே போக்குக்கு விதிவிலக்கல்ல. அவர் எப்போதும் நெற்றியில் விபூதி அணியும் வழக்கம் கொண்டவர். முக்கியமான நாட்களில் அம்மன் கோயிலுக்குச் செல்வதும் அவரது வழக்கமாக உள்ளது. நீர்வளத் துறை பொறுப்பில் உள்ள ஆனந்த், காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்காதது, மேகதாது அணை தொடர்பான நீண்டகால விவகாரம், விவசாயிகள் எதிர்ப்பு ஆகியவற்றால் தொடர்ந்து அழுத்தத்திற்கு உள்ளாகி வருகிறார். 

சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இன்னும் முழு அழுத்தம் கொடுக்காவிட்டாலும், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அவர் பெரும்பாலும் சிரித்துவிட்டு தவிர்த்துச் செல்லும் நிலை காணப்படுகிறது. இந்தப் பின்னணியில் அறை வாசலில் தொங்கும் சிவப்புத் துணி, பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆன்மிக முயற்சியாகக் கருதப்படுகிறது. நீண்டகாலமாகத் தொடரும் காவிரி நதிநீர் பிரச்சினையும் மேகதாது திட்டமும் தமிழக விவசாயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. 

அரசியல் தீர்வுகளுடன் ஆன்மிக நடைமுறைகளும் இணைவது தற்போதைய அரசின் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. இந்தச் சிவப்புத் துணி விவகாரம் அமைச்சரின் தனிப்பட்ட நம்பிக்கையை மட்டும் அல்ல, அரசின் பொதுவான போக்கையும் பிரதிபலிப்பதாகப் பார்க்கப்படுகிறது.
 

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் நெல் கொள்முதலுக்கு லஞ்சம்.! வெங்கட்ரமணன் vs சக்கரபாணி... காரசார வாதம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share