பத்திரப் பதிவில் அதிரடி மாற்றம்..! 34C சட்டத் திருத்தம் ரத்து... நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!!
பத்திரப்பதிவுத்துறையில் 34 சி சட்ட திருத்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் சொத்துப் பத்திரப் பதிவு செயல்முறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் 2025 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முக்கிய சட்டத் திருத்தமே 34-சி பிரிவு ஆகும். இந்தத் திருத்தம் பதிவு சட்டம் 1908-ஐ தமிழ்நாட்டுக்கு ஏற்ப மாற்றியமைக்கிறது. மோசடி, போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலமான பத்திரப் பதிவுகளைத் தடுக்கும் நோக்கத்துடன் இது அறிமுகப்படுத்தப்பட்டது. முன்பு விதி 55-ஏ மூலம் அமலில் இருந்த வழிமுறை உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு, அதற்கு சட்டபூர்வ அந்தஸ்து அளிக்கும் வகையில் இந்தப் புதிய பிரிவு உருவாக்கப்பட்டது.
இந்தச் சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கம் பொதுமக்களை மோசடிகளிலிருந்து பாதுகாப்பதாகும். பல சந்தர்ப்பங்களில் அசல் ஆவணங்கள் இல்லாமல் அல்லது போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சொத்துகள் பதிவு செய்யப்படுவது பெரும் பிரச்னையாக இருந்தது. இதனால் உண்மையான உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்தப் பிரச்னையைத் தீர்க்க 34-சி பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பிரிவின்படி, அசையா சொத்து தொடர்பான எந்த ஆவணத்தையும் பதிவு செய்யும்போது, செயல்படுத்துபவர் முந்தைய அசல் ஆவணத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். அதோடு, பத்திரப் பதிவுக்கு முந்தைய 10 நாட்களுக்குள் பெறப்பட்ட என்கம்ப்ரன்ஸ் சான்றிதழ் அவசியம்.
இந்தச் சட்டத்தின் விதிகள் கடுமையானவை. அடமானம் இருந்தால் அடமானதாரரிடமிருந்து 'நோ ஆப்ஜெக்ஷன் சான்றிதழ்' பெற வேண்டும். ஒப்பந்தம் இருந்து அதன் காலவரையறை முடியவில்லை என்றால் பதிவு செய்ய முடியாது. மூதாதையர் சொத்து என்றால் வருவாய்த் துறையின் பட்டா அல்லது தலைப்புப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும். அசல் ஆவணம் தொலைந்துவிட்டால் போலீஸ் துறையின் 'நான்-டிரேசபிள் சான்றிதழ்' மற்றும் உள்ளூர் செய்தித்தாளில் வெளியிட்ட விளம்பரம் தேவை. அரசு அல்லது பொது அமைப்புகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களுக்கு சில விலக்குகள் உண்டு. இந்தத் திருத்தம் நடைமுறைக்கு வந்தது.
இதையும் படிங்க: இது புதுசா இருக்குண்ணே...!! - அடுத்த ரவுண்ட்டுக்கு தயாராகும் தவெக... அரசு பள்ளிக்குள் நுழைந்து மா.செ. மகன் செய்த அட்ராசிட்டி...
இந்த நிலையில் அசல் ஆவணங்கள் இல்லாத போது ஆவண பதிவுகளை செய்ய இயலாத வகையில் கொண்டு வரப்பட்ட 34சி சட்டத் திருத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 34 சி என்ற சட்ட திருத்தத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால் ஆவண பதிவுக்கு சார்பதிவாளர்கள் தயக்கம் காட்டுவதாக மனு கொடுக்கப்பட்டது. போலி பதிவுகளை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு பதிவு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட சூழலில் 34 சி சட்ட திருத்தம் ரத்து செய்யப்பட்டதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
இதையும் படிங்க: "அரசியல் ஸ்டாண்ட் வேணாம்யா"..! அமைச்சர் நிர்மல் குமாரை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!