ரூ. 20 லட்சம் வரை வைப்புத் தொகை... ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைக்கான பரிந்துரை வெளியீடு...!
ரோடு சோ நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த பரிந்துரைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.
அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்த வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோது, வழிகாட்டு விதிகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. விதிகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ரோடு நடத்த அனுமதி தரப்படாது என்ற உத்தரவு அடிப்படை உரிமையை பறிப்பது ஆகாதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தமிழ்நாடு அரசு முடிவு அரசியல் கட்சிகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பது போல் ஆகாதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது எந்த கட்சியும் பொதுக்கூட்டம் நடத்துவதில் இருந்து தடுக்கப்படவில்லை எனவும் தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது அனைத்து கட்சிகளுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
விதிகள் வகுக்கும் வரை பரப்புரைக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த எந்த தடையும் இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்தது. மேலும், உரிய கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களிடம் ஆலோசித்து தான் விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. காவல், , மாநகராட்சி, தீயணைப்பு, மருத்துவத்துறையை உள்ளடக்கியவரை ஆலோசித்து விதிகளை வகுக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பத்து நாட்களில் விதிகளை வகுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசின் கோரிக்கையை ஏற்று அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம் நவம்பர் 11ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
இதனிடையே, பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் ரோடு ஷோ, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு பரிந்துரைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. நிகழ்ச்சிக்கு முன்னர் இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளது. நிகழ்ச்சி முடிந்த பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து செல்வதை நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் ரோடு ஷோ நடத்தும் அரசியல் கட்சிகளிடம் இருந்து வைப்புத்தொகை ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் பேர் வரை கூடினால் ஒரு லட்ச ரூபாய் வைப்பு தொகை கட்ட வேண்டும் என அரசு பரிந்துரை செய்துள்ளது.
இதையும் படிங்க: பத்து நாள் தான் டைம்... பக்காவா ரெடி ஆகணும்! ரோடு ஷோ விவகாரத்தில் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!
பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை கூடினால் மூன்று லட்ச ரூபாய் வாய்ப்பு தொகை கட்ட வேண்டும் என்றும் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை கூடினால் 8 லட்ச ரூபாய் வரை வைத்து தொகை கட்ட வேண்டும் என்றும் 50,000 பேருக்கு மேல் கூறினால் ரூபாய் 20 லட்சம் வைப்பு தொகை கட்ட வேண்டும் என்றும் பரிந்துரைத்து உள்ளது. ரோடு ஷோ, பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை 3 மணி நேரத்திற்கு உள்ளதாக முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகள் பாதுகாப்பு முக்கியமா தெரியலையா? சிதைந்து பள்ளிகளை சீரமைக்க சீமான் வலியுறுத்தல்...!