×
 

ரவுடி நாகேந்திரன் மரணம்... உடல் முன்பாக மகனுக்கு திருமணம் செய்து வைத்த குடும்பத்தினர்...!

உடல் நலக்குறைவால் உயிரிழந்த ரவுடி நாகேந்திரன் உடல் முன்பாக அவரது இரண்டாவது மகனுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5 ஆம் சென்னையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. சென்னையின் நிழல் உலகத்தில் மூன்று குழுக்களுக்கு இடையேயான ஆதிக்கப் போட்டியும் ஒரு காரணமாக இருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் ஜூலை 14 அன்று போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன் மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகேந்திரன் உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். ஆம்ஸ்ட்ராங் உடனான பகை, நாகேந்திரனின் குடும்பத்தின் அரசியல் ஆகிரமிப்பிலிருந்து தொடங்கியது.

அவரது மகன் என். அஸ்வத்தாமன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் முன்னாள் நிர்வாகியாக இருந்தவர்., அஸ்வத்தாமன், ஆம்ஸ்ட்ராங்குடன் நில விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ரவுடி நாகேந்திரன் ஏ1, சம்போ செந்தில் ஏ2, நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் ஏ3 ஆக அறிவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: ரவுடி நாகேந்திரன் உடலை பிரேத பரிசோதனை செய்யுங்கள்... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் A1 குற்றவாளி ரவுடி நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதை எடுத்து பிரேத பரிசோதனை செய்து ரவுடி நாகேந்திரன் உடன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை வியாசர்பாடியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக நாகேந்திரன் உடல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் ரவுடி நாகேந்திரன் உடல் முன்பாக அவரது இரண்டாவது மகன் அஜித் ராஜீவுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 

இதையும் படிங்க: ரவுடி நாகேந்திரன் மரணம்... எங்களுக்கு DOUBT- ஆ இருக்கு... ஐகோர்ட்டில் முறையீடு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share