ஸ்டன் ஆன பொன்னேரி... பிரபல ரவுடி ஓட, ஓட வெட்டப்பட்ட கொடூரம்.. அண்ணன் கண் முன்னே விரட்டி, விரட்டி நடந்த பயங்கரம்...!
குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை. அண்ணன் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக கொலை அரங்கேறியதா என விசாரணை.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழைய நாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் என்கிற சின்ன கோனை 27. மணலி புதுநகர் காவல் நிலைய சி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வந்த பிரசாந்த் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரும் இவரது அண்ணன் நவீன் என்கிற பெரிய கோனை இருவரும் நாப்பாளையத்தில் உள்ள வீட்டில் வசிக்காமல் வெளியூரில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
பழைய நாப்பாளையம் பகுதியில் இன்று துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக அண்ணன், தம்பி இருவரும் வந்துள்ளனர். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றபோது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் தனித்தனியே மது அருந்தி கொண்டிருந்தபோது மீண்டும் தகராறு ஏற்பட்டு அண்ணன் தம்பி இருவரையும் ஓட ஓட விரட்டி வெட்டத் தொடங்கினர். இதில் சரித்திர பதிவேடு குற்றவாளி பிரசாந்த் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார். அண்ணன் நவீன் வெட்டு காயங்களுடன் ஓட்டம் பிடித்து உயிர் தப்பினார்.
இதையும் படிங்க: கோவையில் சிறுமியை துடிதுடிக்க கொன்றவனுக்கு நேர்ந்த கொடூரம்... வலியால் அலறித் துடித்த படி மருத்துவமனையில் அனுமதி...!
தொடர்ந்து இவர்களை வெட்டிய மர்ம கும்ப கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. ரவுடி ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் காரணமாக அப்பகுதி மக்கள் அலறி அடித்துக் கொண்டு அதிர்ச்சிக்கு ஆளாகினர். இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வெட்டு காயம் அடைந்த அண்ணன் நவீனை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி பிரசாந்த் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலை குறித்து மணலி புதுநகர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து தனிப்படைகளை அமைத்து கிராமத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இறுதி ஊர்வலத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் மட்டுமே எதேச்சையாக கொலை சம்பவம் நடைபெற்றதா, படுகொலை செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி பிரசாந்த் கடந்தாண்டு அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகனை கொலை செய்த வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையதால் பழிக்கு பழிவாங்க இந்த கொலை சம்பவம் அரங்கேறியதா, வேறு ஏதேனும் முன்பகை காரணமாக காத்திருந்து திட்டமிட்டு இறுதி ஊர்வலத்தில் தகராறு ஏற்படுத்தி கொலை அரங்கேற்றப்பட்டதா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING கோவை சிறுமி கொலை வழக்கில் 2 பேர் கைது... பக்கத்திலேயே இருந்த முக்கிய குற்றவாளி சிக்கியது எப்படி?