×
 

அதிமுக ஆட்சியில் வியாபாரிகளின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்.. இபிஎஸ் நம்பிக்கை..!

அதிமுக ஆட்சியில் வியாபாரிகளின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு இன்று நடைபெற்றது. இதில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது, சிறு-குறு வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அந்நிய முதலீடு மசோதாவுக்கு தி.மு.க. ஆதரவு அளித்தது என்றும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கவில்லை என்றால் சிறு வணிகமே இல்லாமல் போகும் எனவும் கூறினார். 

காரணம் இல்லாமல் உள்நோக்கத்துடன் அரசு அலுவலர்கள் வணிக நேரத்தில் தொடர்ந்து ஆய்வு என்ற பெயரில் வியாபாரிகளை துன்புறுத்தி வருவதை கண்டிப்பதாக கூறினார். நாட்டின் பொருளாதாரத்துக்கான முதுகெலும்பு வணிகர்கள் என்றும் உற்பத்தியாளர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் இடையே அச்சாணியாக திகழ்வது நமது வணிகர்களே எனவும் அவர்கள் நலனை பாதுகாப்பதில் அ.தி.மு.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: அடக்குமுறை, பூச்சாண்டிகளுக்கு பயப்பட மாட்டோம்..! அதிமுக எம்எல்ஏ கைதுக்கு இபிஎஸ் கண்டனம்..!

சிறிய தேனீர் விடுதி, அடகு கடைகள், சிற்றுண்டி சாலைகள், பழ வியாபாரிகள் போன்றோர் தொழில் செய்வதற்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் தன்னிடம் கூறியுள்ளதாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி, தங்கள் ஆட்சியில் அவர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது என்றும் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இந்த கோரிக்கைக்கு அ.தி.மு.க. செவி சாய்க்கும்., நீங்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று பேசினார்.

இதையும் படிங்க: கூட்டணிக்காக சமரசமா....? கே.எஸ்.விஜயகுமாருக்கு மீண்டும் Welcome கொடுத்த EPS..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share