நெல்லை மக்களுக்காக பாடுபடுவேன்..! என்னை நம்புங்க..! MLA ஆர்.எஸ். முருகன் உறுதி..!
நெல்லை எம்எல்ஏ ஆர்.எஸ். முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தூத்துக்குடி தமிழக வெற்றி கழக திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். முருகன் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர் . தமிழக வெற்றிக்கழகம் சார்பில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆர் எஸ் முருகன் சட்டமன்றத்தில் எம்எல்ஏவாக பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் நெல்லை சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பில் அவருக்கு தமிழக வெற்றி கழகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் எனக்கு திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்து வெற்றி பெற்றுள்ளேன்., lஇதற்கு தமிழக வெற்றி கழக தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் என்னுடன் உழைத்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் வாக்களித்த திருநெல்வேலி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
திருநெல்வேலி தொகுதியில் தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன்., அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பாடுபடுவேன் என தெரிவித்தார். தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் தொகுதி வளர்ச்சியடைய பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகளிருக்கு மாதம் ரூ.2,5000 எப்போது? - தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கொடுத்த முக்கிய அப்டேட்...!
தமிழக வெற்றி கழகத் தலைவர் தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்றியுள்ளார் என்றும் முதலில் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்க்கு முக்கியத்துவம் அளித்து அளித்து திட்டங்களை நிறைவேற்றி உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். இலவசங்களை அவர் தற்போது அறிவிக்கவில்லை விரைவில் தேர்தல் வாக்குறுதியில் கூறிய அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவார் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: எடப்பாடியை முதல்வர் விஜய் சந்திக்காதது ஏன்? பரபரப்பு அரசியல்... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!