×
 

துணை முதலமைச்சர் பி.ஏ எனக் கூறி பெண் மோசடி.. அதிரடி காட்டிய போலீசார்!

சேலம் அருகே துணை முதலமைச்சர் உதயநிதியின் உதவியாளர் என நாடகமாடி 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் கீழராயபுரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் அரசு பணியில் சேர்வதற்காக முயற்சி செய்து வந்துள்ளார். மாற்றுத்திறனாளியான அரவிந்த், இளநிலை பட்டப்படிப்புடன் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் தயாராகி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜு என்பவரின் மனைவியான வித்யா மோனல் என்பவருடன் அரவிந்தர்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் துணை முதலமைச்சர் உதயநிதியின் உதவியாளராக தன்னை தானே வித்யா மேனன் அரவிந்த இடம் அறிமுகம் செய்ததாக கூறப்படுகிறது. 

 அரவிந்தன் ஆசையை மற்றும் கனவுகளை தனக்கேற்ற மாதிரி பயன்படுத்திக்கொண்ட வித்யா, அரவிந்தருக்கு சின்னசேலம் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி, அவரிடமிருந்து 5 லட்சம் ரூபாய் கையுடலாக பேரம் பேசி உள்ளார்.

இதையும் படிங்க: உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் - திருமணம் மேடையில் உதயநிதி ஸ்டாலின் சூசன புரட்சி.. 

ஆனால் இரண்டு லட்சம் ரூபாய்க்கு பேரம் குறைந்த நிலையில், அரவிந்த் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வித்யாவிற்கு ஒரு லட்சம் ரூபாய் முன் தொகையாக செலுத்தியுள்ளார். பின்னர் மீதத்தை இரு தவனையாக பணத்தைப் பெற்றுக் கொண்ட வித்யா மோனல், போலி நியமன ஆணையை அரவிந்துக்கு வழங்கியுள்ளார்.

 ஆணையை சந்தோஷம் மற்றும் மனமகிழ்வுடன் அரவிந்த் பெற்றுக்கொண்டுள்ளார். பணியில் சேர்வதற்காக ஆசையுடன் அலுவலகத்திற்குச் சென்ற அரவிந்தற்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது அரசாணை பெற்ற அதிகாரிகள் ஆய்வில் அந்த அரசாணை போலி என்பது தெரியவந்தது.

 இதை எடுத்து பாதிக்கப்பட்ட அரவிந்த், இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியருக்கும் புகார் கடிதம் அனுப்பி உள்ளார். இதன் எதிரொலியாக பகுதி போலே சார் அரவிந்தன் புகாரை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 மேலும் தலைமறைவான திமுக பிறகும் பிரமுகரான வித்யா மோனல் மற்றும் அவரது கணவர் ராஜுவை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். மேலும் வித்யா மோனல் சின்னத்திரை, பெரியத்திரை உள்ளிட்ட படப்பிடிப்புகளுக்கு ஆள் சேர்க்கும் ஏஜென்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார். ஆனால் திமுக பிரமுகரான வித்யா மோனல் தன்னை துணை முதலமைச்சர் உதயநிதியின் உதவியாளர் எனக்கூறி அரவிந்தை ஏமாற்றியது அம்பலமானது. தொடர்ந்து விசாரணை தீவிர படுத்திய போலீசார் தலைமறைவான வித்யா மோனலை மோசடி உள்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டம்! தடை செய்வதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? ரோஸ்ட் செய்யும் அன்புமணி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share