“எங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது”... மண் கடத்தலை தடுத்த மக்களுக்கு மிரட்டல்... தவெக ஒன்றிய செயலாளர் அட்டூழியம்...!
லாரி லாரியாக மண் அள்ளுவதை தட்டி கேட்ட பொது மக்களை , மிரட்டும் தவெக ஒன்றிய செயலாளரின் வீடியோ வெளியாகி வைரலாகி பரபரப்பு.
சேலம் அருகே தவெக ஒன்றிய செயலாளரின் தலைமையில் ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளிச்செல்லும் கும்பல். லாரி லாரியாக மண் அள்ளுவதை தட்டி கேட்ட பொது மக்களை , மிரட்டும் தவெக ஒன்றிய செயலாளரின் வீடியோ வெளியாகி வைரலாகி பரபரப்பு.
தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அக்கட்சியினர் தொடர்ந்து பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி பகுதியில் உள்ள ஏரியில் தவெகவினர் கடந்த சில நாட்களாக மண் எடுத்து வருகின்றனர்.
அனுமதி இன்றி அதிக அளவில் மண்ணை டிராக்டர்களில் எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது.
குறிப்பாக நிர்ணயக்கபட்ட அளவை விட கூடுதலாக 20 க்கும் மேற்பட்ட வாகனங்களில் இரவு பகலாக மண் எடுத்து செல்வதால் ஏரியின் கரை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதாவது அந்த பகுதியின் தவெக ஒன்றிய செயலாளர் சிவா தலைமையில் தவெக-வினர் அங்கேயே முகாமிட்டு இந்த மண் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அளவிற்கு அதிகமாக சட்ட விரோதமாக மண் அள்ளுவதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் , இது குறித்து கேள்வி எழுப்பிய போது அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
இதையும் படிங்க: “கோமாளி கூட்டத்திடம் கோட்டையை ஒப்படைத்தால்...” - சி.எம். விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!
மேலும் மண் அள்ளுவதற்கு வீரபாண்டி தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் அனுமதி அளித்து உள்ளதாகவும், தங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது என்றும் மிரட்டி, அங்கேயே இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து மிரட்டும் வகையில் பேசி உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம், காவல்துறை உள்ளிட்ட அனைவரிடமும் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் கூறப்படுகிறது.
தவெகவினரின் இந்த சட்ட விரோத நடவடிக்கையின் காரணமாக ஆண்டிப்பட்டி ஏரிக்கரை வலுவிழந்து விடும். இதனால் மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படும் எனவே உடனடியாக ஏரியில் மண்ணெழுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அரசின் சொத்தை தொட விட மாட்டேன் , தொட்டால் விடமாட்டேன் என்ற சினிமா டயலாக் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் , தங்களுடைய கட்சியினர் தொடர்ந்து இது போன்ற பல்வேறு சமூக விரோத செயலில் ஈடுபட்டு வருவதை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது...
இதையும் படிங்க: #BREAKING கையை முறுக்கி ஆவேசம்... தவெக எம்.எல்.ஏ. தாக்கியதில் செய்தியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி... நடந்தது என்ன?