×
 

நள்ளிரவில் பயங்கரம்... சமயபுரம் கோயிலுக்குச் சென்ற 3 பேர் உடல் நசுங்கி பலி... 7 பேரின் நிலை என்ன?

சமயபுரம் அருகே சாலை விபத்து. ஆம்னி பேருந்து - கார் மோதி 9 வயது சிறுவன் உட்பட 3 பக்தர்கள் பலி. 7 பேர் காயம்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் உட்பட 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா, கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 5 பெண்கள், 5 ஆண்கள் என மொத்தம் 10 பேர் தஞ்சாவூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் செல்வதற்காக சைலோ காரில் வந்துள்ளனர்.

​நேற்று இரவு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் கட் ரோடு கடந்து பள்ளிவிடை பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, கோவில் வழித்தடமான இடதுபுற சர்வீஸ் சாலையில் செல்லாமல் கார் தவறுதலாக நேராகச் சென்றுள்ளது. 
சிறிது தூரம் (சுமார் 5 மீட்டர்) சென்ற பிறகு காரை ஓட்டி வந்த ஓட்டுநர் மகேஸ்வரன், காரை திடீரென பிரேக் அடித்து நிறுத்தி. காரை பின்னோக்கி இயக்கம் முயன்றுள்ளார்.

​அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த காம்ஃபோர்ட் டிராவல்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான தனியார் ஆம்னி பேருந்து (TN 46 AJ 1759), காரின் (TN 55 Y 3060) பின்பகுதியில் பலமாக மோதியது. இதில் காரின் பின்பகுதி முற்றிலும் நொறுங்கி உருக்குலைந்தது.

காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடினர்.  அவர்களை பொதுமக்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: அதிகாலையில் மேம்பாலத்தில் நடந்த கோரம்... ஆம்னி பஸ்ஸுக்குள் சென்ற கார்... அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவத்தால் 2 பேர் துடிதுடித்து பலி...!

​ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பாண்டியன் (வயது 49) தனலட்சுமி (வயது 47)​ மற்றும் பிரவீன் (வயது 09) சிறுவன் ஆகிய 3 பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 7 பேரில் ​கௌசல்யா (வயது 46) ​வளர்மதி (வயது 45) ​தில்லையம்மாள் (வயது 48) ஆகிய மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

​மேலும், கோகுலவாணி (வயது 13), மணிசர்மா (வயது 16), திருநாவுக்கரசு (வயது 52) மற்றும் கார் ஓட்டுநர் மகேஸ்வரன் ஆகிய 4 பேர் அபாய கட்டத்தைத் தாண்டி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான வாகனங்களைக் கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்தனர்.

​இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய ஆம்னி பேருந்தின் ஓட்டுநரான ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த அஜித் குமார் (வயது 27) என்பவரைக் கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

​சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

இதையும் படிங்க: குதிரை பேரமா? - உங்க நெஞ்சுல கையை வச்சு சொல்லுங்க... இபிஎஸுக்கு இடியை இறக்கிய செங்கோட்டையன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share