×
 

“எக்காரணம் கொண்டும்...” - டெல்டா பகுதிகளில் மணல் குவாரிகள்... கட் அண்ட் கறாராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு...!

தஞ்சை ​டெல்டா பகுதியில் மனல்  குவாரிகளுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக்கூடாது உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

எக்காரணம் கொண்டும் மணல்  குவாரிகளுக்கு இனி அனுமதி வழங்கக்கூடாது  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு  நீதிபதிகள் உத்தரவு.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் சேர்ந்த வழக்கறிஞர் ஜீவக்குமார் தாக்கல் செய்த வழக்கு. தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக  டெல்டா அறிவிக்கபட்டுள்ளது ​காவிரி டெல்டா பகுதி தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக கருதப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் அள்ளப்பட்டு சுற்றியுள்ள பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது இந்த பகுதியில் எந்தவொரு மணல் குவாரி நடவடிக்கையையும்  மேற்கொள்ளக் கூடாது மேலும்  திருவையாறு  தாலுகாவில் உள்ள அச்சனூர், மருவூர், கடுவெளி, மணத்திட்டை, பூதலூர் தாலுகாவில் உள்ள மாரனேரி, புத்தூர், புதுக்கரி வாரம்பாடை, கழமங்கலம், ஓரத்தூர், விண்ணமங்கலம், கல்வடி, பெரும்புலியூர்  மற்றும் சுற்றியுள்ள இடங்ளில் பல சட்டவிரோத மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன.

​இதனால் இப்பகுதியில் இயற்கை வளங்கள் கொள்ளை போகின்றன. எனவே டெல்டா பகுதியில் எந்தவொரு மணல் குவாரி நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், புதியதாக குவாரிகளுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என  மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன் சக்தி வேலு  ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: 10 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! பரந்தூர் திட்டம் குறித்து அரசு அண்ணாமலை ஆலோசனை!

​அப்போது மனுதாரர் தரப்பு  வழக்கறிஞர்  ஆஜராகி, "டெல்டா பகுதியில் குவாரி பணிகளை தொடர அனுமதித்தால் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கம் சிதைக்கப்படும்" என வாதிட்டார்.

​பின்னர் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையில், இந்த பகுதியில் 4,40,335 கன மீட்டர் அளவுக்கு மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று காரணமாக குவாரி பணிகள் நிறுத்தப்பட்டன. 2016-2020-ம் ஆண்டு வரையிலும், 2021-ம் ஆண்டில் சில மாதங்கள் வரையிலும் மாட்டு வண்டிகள் மூலம் 857.2 கன மீட்டரும், லாரிகள் மூலம் 1,52,724 கன மீட்டர் மணல் அள்ளப்பட்டுள்ளது. 

மேலும், 2023 முதல்  அதன் பிறகு குவாரி பணிகள் நிறுத்தப்பட்டன. அனுமதிக்கப்பட்ட மொத்த அளவான 4,40,335 கன மீட்டர் மணல் முழுமையாக அள்ளப்படவில்லை" என கூறப்பட்டிருந்தது.​இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு.​

இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள கிராமங்களில் குவாரிகள் மூடப்பட்டுவிட்டன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இனி மணல் குவாரி நடத்தாமல் இருப்பதுதான் நல்லது. இந்த கிராமங்களில் குவாரி பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரும் எந்தவொரு விண்ணப்பத்தையும் மாவட்ட ஆட்சியர்  பரிசீலிக்கக் கூடாது. 

எக்காரணம் கொண்டும் இப்பகுதிகளில் குவாரிகளுக்கு இனி அனுமதி வழங்கக்கூடாது என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: டெல்லி VIP பங்களாக்களுக்கு ஆண்டுக்கு ரூ.92 கோடி செலவு! வெளியான அதிர்ச்சி கணக்கு! RTI தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share