போராட இடம் ஒதுக்குவது பெருமையா..? தூய்மை தேவதைகள்... புகழ்ந்தால் போதுமா CM.. TTV தினகரன் காட்டம்..!
தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை டிடிவி தினகரன் முன் வைத்தார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 15 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த நீண்ட போராட்டத்தால் மாநகரின் தூய்மைப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து போராட விடுவது எந்த விதத்திலும் நியாயமல்ல என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ரீல்ஸ் வீடியோக்களுக்காக தூய்மைப் பணியாளர்களை “தூய்மை தேவதைகள்” என்று புகழ்ந்து பாராட்டினால் மட்டும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படாது என அவர் கூறினார். ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்வதாக தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்த திமுக ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்தும், அவர்களின் அடிப்படைக் கோரிக்கையான பணிநிரந்தரம் குறித்து விவாதிக்கக்கூட மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அவர் தெரிவித்தார். 15 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்தப் போராட்டத்தைப் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, அவர்கள் போராடுவதற்கு ரிப்பன் மாளிகை வளாகத்தில் இடம் ஒதுக்கிக் கொடுத்ததையே பெருமையாகப் பேசுவது வெட்கக்கேடான செயல் என அவர் விமர்சித்தார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பணிநிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை தனது பனையூர் இல்லத்திற்கு அழைத்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், இப்போது சட்டமன்றத்திற்கு அருகிலேயே உள்ள ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராடிக் கொண்டிருக்கும் அதே பணியாளர்களைச் சந்திக்கத் தயங்குவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். சென்னை மாநகரத்தைத் தூய்மையாக வைத்திருப்பதிலும் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணிக்காப்பதிலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வரும் இந்த முன்களப் பணியாளர்களைக் குறைந்தபட்சம் அமைச்சர்களாவது நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிவதில் என்ன தயக்கம் எனவும் அவர் வினவினார்.
இதையும் படிங்க: பிரதமர் ரேஸில் விஜய்... ஒரே வார்த்தையில் ஜோலியை முடித்த டிடிவி தினகரன்... கருத்துக்கணிப்பு குறித்த கமெண்ட் தான் ஹைலைட்டே...!
எனவே சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அத்துடன் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று திமுக அரசை அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சட்டவிரோத மணல் கொள்ளை..! இரும்பு கரம் கொண்டு அடக்குங்க CM..! TTV தினகரன் வலியுறுத்தல்..!