×
 

உச்ச நீதிமன்ற உத்தரவால் அதிர்ந்த வருசநாடு... வனத்துறையை எதிர்த்து கொந்தளித்த மலைவாழ் மக்கள்!

அந்தப் பணிகள் முடியும் வரை யாரையும் வீடுகளை விட்டு வெளியேற்ற மாட்டோம் என்றும் ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருசநாடு, மேகமலை மற்றும் சுற்றுவட்டார மலைக்கிராம மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வனத்துறை மேற்கொள்ளும் வெளியேற்ற நடவடிக்கைகளைக் கண்டித்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. மற்றும் இரு மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “கடந்த 15-ஆம் தேதி முதலமைச்சரைச் சந்தித்து, மக்களை எந்தக் காரணத்தினாலும் வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தினோம். அதற்கு வலுசேர்க்கும் வகையில் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களின் கோரிக்கைகளை விரிவாக ஆட்சியரிடம் எடுத்துரைத்தோம்.”

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்ததாக ஆட்சியர் கூறியுள்ளார். வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் மேகமலை, வருசநாடு உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உரிமை கோரும் மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, மனைப்பட்டா மற்றும் நிலப்பட்டா வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் முடியும் வரை யாரையும் வீடுகளை விட்டு வெளியேற்ற மாட்டோம் என்றும் ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

இதையும் படிங்க: அவதூறு பேச்சுக்கு ஆப்பு..! மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை... சபாநாயகர் அதிரடி”

வனத்துறையினர் விவசாயத்தைத் தடுப்பது, போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற தொந்தரவுகளைச் செய்து மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதற்காக வனத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அடங்கிய கூட்டுக் கூட்டம் நடத்தி, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்துள்ளார். மேய்ச்சல் உரிமையும் வன உரிமையின் முக்கிய அம்சம் என்பதை வலியுறுத்தினோம்; அது குறித்தும் விவாதிக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்கள் மேம்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சுமார் 98 மலைக்கிராமங்களில் தலைமுறைகளாக வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் உத்தரவு பிறப்பித்திருந்தாலும், வன உரிமைச் சட்டத்தின்படி பாரம்பரிய மலைவாழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கை. ஆட்சியரிடம் நடத்திய பேச்சுவார்த்தை மிகுந்த மனநிறைவளிப்பதாக இருந்தது என சண்முகம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: NEET OMR குழப்பம் விவகாரம்! மாணவர்களின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share