×
 

#Viralvideo வகுப்பறை முன் மது அருந்தும் பள்ளி மாணவிகள்... இதுதான் தவெக ஆட்சியின் மாற்றமா? என மக்கள் கொந்தளிப்பு...!

வகுப்பு முடிந்த பின்னர், ஒரு சில மாணவிகள் வகுப்பறையிலேயே அமர்ந்து மது அருந்தியதோடு, வெளியிலிருந்து அசைவ உணவுகளைப் பார்சல் வாங்கி வந்தும் சாப்பிட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்.தலைமை ஆசிரியை இடமாற்றம்.

கன்னியாகுமரி மாவட்டம்  தக்கலை அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த 1 ம் தேதி நீட், கியூட், உள்ளிட்ட தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுள்ளன.இதற்கு ஏராளமான மாணவ, மாணவியர் வருகை தந்துள்ளனர். வகுப்பு முடிந்த பின்னர், ஒரு சில மாணவிகள் வகுப்பறையிலேயே அமர்ந்து மது அருந்தியதோடு, வெளியிலிருந்து அசைவ உணவுகளைப் பார்சல் வாங்கி வந்தும் சாப்பிட்டுள்ளனர்.

மாணவிகள் மது அருந்துவதை சக மாணவி ஒருவரே தனது செல்போனில்  வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில், மாணவிகளுக்கு தேவையான மதுபான பாட்டில்களை அவர்களது நண்பர் ஒருவர் டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கி வந்து கொடுத்தது குறித்த உரையாடல்களும் இடம் பெற்றுள்ளன. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவேகமாகப் பரவி, பொதுமக்க ளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குடிபோதையில் ஆட்டோ ஓட்டி விபத்து! உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர் உட்பட 4 பேர் படுகாயம்!

இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த குமரி மாவட்ட ஆட்சியர்  பிரதாப், உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜிடம் இது தொடர்பான முழு விவரங்களையும் ஆட்சியர்  கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து, நிர்வாகக் காரணங்களுக்காக தக்கலை அரசு மேல் நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பிரமிளா இவாஞ்சலின், நாகர் கோவில் வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 

சம்பவம் தொடர்பாகக் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.பள்ளி மாணவிகளுக்கு மதுபாட்டில் வாங்கித் தந்தது யார்,இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கல்விக் கூடத்திற்குள் மாணவிகளே மது அருந்திய இச்சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளின் இத்தகைய ஒழுக்கமற்ற செயல் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு குறித்து பெற்றோர்கள் கடும் அதிருப்தியும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இனி டாஸ்மாக் மதுபானம் வாங்க ஆன்லைன் போதும்! நாளை முதல் புதிய சேவை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share