×
 

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராட்டம்... இடைநிலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது...!

டிபியை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர். இந்தப் பிரச்னை கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ஒரு ஊதிய முரண்பாட்டால் உருவானது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும், ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகு சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உள்ளது.

ஒரே மாதிரியான பணி, ஒரே கல்வித் தகுதி இருந்தும், இந்த வேறுபாடு சுமார் ரூ.3,170 அளவுக்கு இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது ஏறத்தாழ 20,000 ஆசிரியர்களைப் பாதித்துள்ளது.இந்த முரண்பாடு ஊதிய ஆணைய மாற்றங்களால் ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற தீர்ப்புக்கு எதிரானது என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA) இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்கள் போராடியபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.  2021ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் (வரிசை எண் 311) இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகியும் இது நிறைவேற்றப்படவில்லை என்பதே ஆசிரியர்களின் முக்கிய குற்றச்சாட்டு.

இதையும் படிங்க: ரொம்ப பெருமையா இருக்கு.. சர்வதேச போட்டிகளில் அசத்தும் தமிழக மாணவர்கள்... துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்...!

இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட போது ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறி முழக்கங்களை எழுப்பி ஆவேசத்தை வெளிப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றதால் ஆசிரியர்கள் மிகவும் ஆவேசம் அடைந்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: அனைத்திலும் இந்தி திணிப்பு...! பாஜகவையும், அதிமுகவையும் வீழ்த்த வேண்டும்... - டி.ஆர்.பாலு திட்டவட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share