"வீட்டுக்கு ஒரு அரசு வேலை"... முதல்வர் விஜய் செவி சாய்க்கணும்..! சீமான் வலியுறுத்தல்..!!
கத்தாரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
கத்தார் தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தில் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். கத்தார் தீவிபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு பத்து லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிப்பதற்கு முதலமைச்சர் விஜய்க்கு நன்றி கூறினார்.
கத்தார் நாட்டிலுள்ள ராஸ்-லஃபான் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கிவரும் ராஸ்-லஃபான் கேஸ் நிறுவனத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்ட எதிர்பாராத பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து உள்ளார்.
பொருளாதாரத் தேவைகளுக்காக புலம்பெயர்ந்து உழைக்கச் சென்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பபித் (26), சஜித்குமார் (25), சுவின் (24) ஆகிய மூன்று தமிழர்கள் உட்பட 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என்றார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: சீமான் போராடியதை முடித்துக் கொடுத்த முதல்வர் விஜய்! அரசு பஸ்களில் மீண்டும் இடம் பிடித்தது தமிழ்நாடு!
உயிரிழந்த தமிழர்களின் உடல்களை எடுத்துவரத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டதற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு, இளம் வயதில் குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக உழைக்கச் சென்றவர்களை இழந்து நிற்கும் மூன்று குடும்பங்களுடைய எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடுமாறும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: மேகதாதுவுக்கு நடுவர் மன்றமா..? இன்னும் மோசமாகும்... எச்சரித்த சீமான்..!