×
 

தன் 4 வயது மகனை கட்டியணைத்து மரணித்த தாய்..! நெஞ்சை உலுக்குது..! சீமான் வேதனை..!!

மதி பிரதேசத்தில் படகு கவிழ்ந்த விபத்து குறித்து சீமான் வேதனை தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பார்கி அணையில் ஏற்பட்ட பரிதாபமான படகு விபத்தில் 9 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணையின் நீர்ப்பரப்பில், மாநில சுற்றுலாத் துறை இயக்கும் சுற்றுலா படகு ஒன்று திடீர் புயல் காற்று காரணமாக சமநிலை இழந்து கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பார்கி அணை, நர்மதா நதியின் முக்கிய அணைகளில் ஒன்றாகும். இங்கு சுற்றுலா பயணிகளுக்கு படகுச் சவாரி வசதி செய்யப்படுவது வழக்கம். ஆனால், திடீர் வானிலை மாற்றங்களை முன்கூட்டியே கணிக்கும் அமைப்புகளில் குறைபாடு இருந்ததா என்பது குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளன. 

SDRF. உள்ளூர் போலீஸ், மீன்வளத் துறை மற்றும் நன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் மீட்புப் படைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்த விபத்தில் உயிர் தப்பிய சிலர், படகில் உயிர்காக்கும் சாதனங்கள் (லைஃப் ஜாக்கெட்கள்) போதுமான அளவு இல்லை என்றும், படகு அதிக அளவு நிரம்பியிருந்ததாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சிலர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒரு தாயும் அவரது 4 வயது குழந்தையும் இறுகக் கட்டிப்பிடித்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் மேலும் மனதை உலுக்கியுள்ளது. சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான துயர நிகழ்வில் அதில் பயணித்த 9 பேர் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கட்சியை சீரமைக்கும் நேரம் வந்துவிட்டது! நாதகவில் போர்க்கொடி! சீமானிடம் தம்பிகள் எதிர்பார்ப்பு!

உயிரிழந்தவர்களில் இந்திய பாதுகாப்புத் துறை வெடிமருந்து தொழிற்சாலையில் பணியாற்றி வந்த திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த சகோதரர் காமராஜ், அவருடைய மனைவி கார்குழலி, அன்புமகன் தமிழ்வேந்தன், உறவினர்கள் மயூரன் மற்றும் சவுபாக்கியவதி ஆகிய ஐந்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது துயரத்தை மேலும் அதிகரிக்கிறது என்றார். நீரில் மூழ்கியபோதும் 4 வயது மகனை அணைத்தபடி மரணித்துள்ள தாயின் புகைப்படம் நெஞ்சை உலுக்குகிறது என்று தெரிவித்தார். பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தொடர்புடைய மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க: ஏறெடுத்து பார்க்க கதியில்லாமல் நிற்கும் தொழிலாளர்கள்..! சீமான் வேதனை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share