×
 

இலவச பிரிட்ஜ்-ல குடுக்குறவங்க கை, கால்களை வெட்டி வைப்பதா..? சீமான் சரமாரி கேள்வி..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையும் மேற்கொண்டார்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. ஒவ்வொரு தொகுதி வேட்பாளரையும் ஆதரித்து சீமான் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். சீமான் காரைக்குடியில் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விவசாயி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் செயல்பாடுகளையும் எடுத்துரைத்து வருகிறார். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், இலவசங்கள் குறித்து சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார். இலவச மிக்ஸி கொடுத்து விட்டால் அதில் எதை அரைப்பது என்றும் பிரிட்ஜ் இலவசமாக கொடுத்தால் எதை ஃப்ரிட்ஜில் வைப்பது எனவும் கேள்வி எழுப்பினார் ஒரு வீட்டு திருடி விட்டு 2000 ரூபாய் கொடுத்தால் வாங்குவீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார் 

இதையும் படிங்க: பயந்து போய் இரண்டு தொகுதியில நிக்குறேனா.? விஜயை வம்பிழுத்த சீமான்..!!

மக்கள் அனைவரும் சும்மா இருக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள் என்றும் இலவச ஃப்ரிட்ஜில் கொடுப்பவர்களின் கை கால்களை வெட்டி வைப்பதா எனவும் சரமாரியாக சாடினார். எதற்காக படித்தீர்கள் என்று கேட்டுள்ளார். ஆட்சியாளர்களிடம் மக்கள் கேள்வி கேட்காமல் எந்த மாற்றமும் ஏற்படாது என்று தெரிவித்தார். நரி கதையை கூறி இலவசங்களின் நிலை குறித்து சீமான் விளக்கினார். என் இனத்திற்கு நிகழ்கால தேவை மட்டும்தான் தெரிகிறது என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க: நடுக்கடலில் சட்டவிரோத நடவடிக்கை.. நாதக வேட்பாளரை வலை வீசி தேடும் மீன்வளத்துறை- நடந்தது என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share