பயம் இருக்குன்னா எதுக்கு அரசியலுக்கு வரணும்? எதுக்காக பாதுகாப்பு? விஜய்க்கு சீமான் கேள்வி..!
பயம் இருந்தால் எதற்காக அரசியலுக்கு வரவேண்டும் என விஜய்க்கு சீமான் கேள்வி எழுப்பினார்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மார்ச் 30ஆம் தேதி தனது வேட்பு மனுவை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்தார். இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். பெரம்பூர் தொகுதியில் மனு தாக்கல் செய்த பிறகு பரப்புரை மேற்கொண்டார். அங்கு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பிறகு கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு சென்று இருந்தார்.
கொளத்தூர் தொகுதியில் முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று கூறி வில்லிவாக்கம் தொகுதி பரப்புரை ரத்து செய்யப்பட்டது. விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்க்கு கொடுத்துள்ள Y பிரிவு பாதுகாப்பு கூட முறையாக இல்லை என்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, எவ்வளவு பெரிய கதாநாயகன் விஜய் என்றும் அவரால் இதனை சமாளிக்க முடியாதா எனவும் கேள்வி எழுப்பினார். விஜயின் படம் வெளியாகவில்லை என்றும் தணிக்கை சான்று கிடைக்கவில்லை எனவும் அது பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவெக வேட்பாளர் மீது பொய் பாலியல் புகார்..! எஸ் பி அலுவலகம் முற்றுகை.. பரபரப்பு..!!
அவருக்கு கூட தாங்கள் தான் பேச வேண்டும் என்றும் கூறினார். முன்பு பாஜக பாசிசம் என்றதாகவும் தற்போது பாயசம் ஆகிவிட்டதா எனவும் விமர்சனம் செய்தார். பயம் இருக்கிறது என்றால் எதற்காக அரசியலுக்கு வரவேண்டும் என்ற கேள்வி எழுப்பினார். எதற்காக பாதுகாப்பு எனவும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: வேட்பு மனுவை மறந்து சென்ற தவெக வேட்பாளர்...! திருப்பி அனுப்பிய அதிகாரிகள்..! காத்திருந்து மனுத் தாக்கல்..!!