×
 

போட்டாரு ED.. ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க.. சீமான் செம்ம கலாய்..!

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் இந்த முறை பங்கேற்றது தொடர்பாக சீமான் விமர்சித்துள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டார். தமிழகத்திற்கு நிதியை விடுவிக்க கோரிக்கை வைப்பேன் என கூறி இருந்தார். 3 முறை நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின், ED ரெய்டு வந்தவுடன் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து உள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி திருச்செந்தூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் சீமான் கலந்துக் கொண்டார்.

இதையும் படிங்க: எங்கள பார்த்தாலே ஸ்டாலினுக்கு அல்லு...மிரட்டல் பாட்ச்சா லாம் பலிக்காது! இபிஎஸ் ON FIRE!

அப்போது பேசிய அவர், 3 நிதி ஆயோக் கூட்டத்திற்கு வீராப்பாக இருந்த ஸ்டாலின், ED வந்தவுடன் ஓடிப்போய் மோடியை பார்த்ததாக விமர்சித்தார். போட்டாரு ED., ஓடி வாரேன் மோடி என டெல்லிக்கு சென்றதாக கூறினார். பள்ளி பிள்ளையை போல சந்திரபாபு நாயுடு பக்கத்தில் ரெக்கமண்டேஷனுக்கு நின்றுக் கொண்டு இருந்ததாகவும், தீந்தாரும் தீந்தாரும் சேர்ந்தார் என்பது போல இருந்ததாகவும் கூறினார்.

ஏதோ தெரியாமல் செய்துவிட்டோம் மன்னித்துவிடுங்கள் என கேட்பது போல, பணிந்து நின்றதாகவும் கூறிய சீமான், நிதியை விடுவியுங்கள் என ஸ்டாலின் கூறுகிறார்...எந்த நிதியை? என கேட்டால் உதயநிதியை என்பார் ஸ்டாலின் என விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: புல்லட் பாண்டி.. அழுத்தமா அடிங்க.. முதலமைச்சரை கிண்டல் அடித்த அண்ணாமலை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share