சொன்னீங்களே.. செஞ்சிங்களா? - சீமான் விவகாரத்தில் டென்ஷன் ஆன நீதிபதி..!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த முறை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், இன்று ஆஜராகாதது நீதிபதியைக் கோபமடையச் செய்துள்ளது.
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர்.
அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் அவதூறாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4 நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: இதுதான் கடைசி CHANCE... இனி இப்படி செஞ்சா... சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை!
அந்த வழக்கு விசாரணை தொடர்பாக டிஐஜி வருண்குமார் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதற்காக இன்று வருகை தந்துள்ளார் இன்னும் சற்று நேரத்தில் நீதிபதி விஜயா முன்பு நேரில் ஆஜராகினார்.
இந்த வழக்கில் சீமான் இன்று ஆஜராகாத நிலையில் இது குறித்து சீமான் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி விஜயா, கடந்த முறையின் போது முறையாக ஆஜராகுவேன் என்ற என்று கூறி தான் சென்றீர்கள் அப்படி இருக்கையில், இன்று ஆஜராகாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் அண்ணே தூண்டில அங்கிட்டு போடுங்க... ஆதரவாளர்கள் கொடுத்த ஐடியா...!