×
 

நடைப்பயிற்சி மேற்கொண்டு காரைக்குடியில் சீமான் வாக்கு சேகரிப்பு..! கார்த்தி சிதம்பரம் எம்.பி.யை தவிர்த்த சீமான்..!

நடைப்பயிற்சி மேற்கொண்டு காரைக்குடியில் சீமான் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.

பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியது.

சீமான் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். காரைக்குடி தொகுதியில் வேட்பாளராக சீமான் களமிரங்கி இருக்கிறார். இந்த நிலையில், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் மைதானத்திற்கு வந்து சங்க உறுப்பினர்களிடையே வாக்கு கேட்டார் காரைக்குடியில் சீமான் நடைபயிற்சி செய்து வாக்கு கேட்டார்.

இதையும் படிங்க: எந்தக் கொம்பன் வந்தாலும் என் வெற்றியை தடுக்க முடியாது..! சீமான் திட்ட வட்டம்..!

காரைக்குடி அழகப்பர் நடையாளர் சங்க உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எம்பி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு ஆதரவாக நடை பயிற்சி செய்து வாக்கு சேகரித்து இருந்தார். இந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்துடனான சந்திப்பை தவிர்த்த சீமான் புறப்பட்டார். ஒரே இடத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட கார்த்தி சிதம்பரம், அரசியல் நாகரிகம் கருதி சீமானை சந்திக்க காத்திருந்த கார்த்தி சிதம்பரத்தை தவிர்த்துவிட்டு சீமான் சென்றார்.

இதையும் படிங்க: தேர்தல் விதிமீறல்..!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share