×
 

#BREAKING: தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரம்.. அரசு வேலையில் பெண்களுக்கு சரி பாதி பங்கு..! தூள் கிளப்பிய சீமான் தேர்தல் அறிக்கை..!!

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். திருச்சி, கோவை, சென்னை, குமரி, மதுரை ஆகிய ஐந்து தலைநகரங்கள் அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். மூன்று சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி என்று வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். குடியரசு தலைவரை மக்களே தேர்ந்தெடுக்க வலியுறுத்துவோம் என்றும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற படிவங்கள் அனைத்தும் தமிழில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை பெற்று தர ஏற்பாடு செய்யப்படும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் உள்ளூரில் ஓடும் ரயில்களை மாநில அரசை நிர்வகிக்க சட்டம் இயற்றப்படும் என்றும் மாநில நீதிமன்றத்தில் அந்தந்த மாநிலத்தவர் தலைமை நீதிபதியாக இருக்க சட்டம் இயற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரிகள் 75% கிடைக்க போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழகத்தில் தமிழே நீதிமன்ற மொழி மற்றும் வழக்காடு மொழியாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் வாக்களித்தல் என்பது கட்டாய கடமையாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் தூய தமிழ் மொழியில் மருத்துவக் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் நாம் தமிழர் கட்சி அன்பான சர்வாதிகார ஆட்சியாக இருக்கும் என்றும் நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரங்களில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கிடையாது என்றும் அனைத்து வீட்டிற்கும் இலவச குடிநீரை அரசே வழங்கும் எனவும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தனித்து களமாடும் நாம் தமிழர்..! தேர்தல் அறிக்கையை வெளியிடும் சீமான்..!!

மாநிலம் முழுவதும் மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை அமைக்கப்படும் என்றும் அரசு வேலைகளில் பெண்களுக்கு சரி பாதி பங்கு வழங்கப்படும் எனவும் பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனி தொகுதியை போல் பெண்களுக்கு தனி தொகுதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாநிலங்களவை உறுப்பினராகி அமைச்சராக முறையை மாற்ற சட்டம் திருத்தம் கொண்டுவர நாம் தமிழர் கட்சி போராடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வடிவில் 75% கிடைக்கப் போராட்டம் நடத்தப்படும் என்றும் சீமான் வாக்குறுதி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் COCO COLA உள்ளிட்ட குளிர்பான தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: தேர்தல் நடத்தை விதிகளை மீறி கூட்டம்... நாம் தமிழர் கட்சி மீது அதிரடியாக பாய்ந்த வழக்கு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share