×
 

MGR, ஜெயலலிதா படங்களை வைக்கக் கூட அனுமதிக்காதவர் EPS..! அமைச்சர் செங்கோட்டையன் சரமாரி குற்றச்சாட்டு..!

எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை கூட வைக்க அனுமதிக்காதவர் இபிஎஸ் என்று செங்கோட்டையன் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் அவ்வப்போது வெளியிடும் பேட்டிகள் பெரும் கவனத்தை ஈர்க்கின்றன. அதிமுகவில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், ராஜினாமா செய்து டிவிகேவில் இணைந்த அவர், தற்போது அரசின் முக்கிய துறைகளில் பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட கருத்துகள் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு எதிரான தெளிவான பதிலாக அமைந்துள்ளன. செங்கோட்டையன் அவர்கள் தனது அரசியல் பயணத்தை அதிமுகவில் தொடங்கினார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து ஜெயலலிதா வரை பல தலைவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்தவர். பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், 2025இல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, 2025 நவம்பரில் டிவிகேவில் இணைந்தார்.

ராஜினாமா செய்து புதிய கட்சியில் இணைவது தனிப்பட்ட விருப்பம் என்று அவர் அடிக்கடி வலியுறுத்துகிறார். “நானே ராஜினாமா செய்துவிட்டு டிவிகேவில் இணைந்தேன்” என்பது அவரது நிலைப்பாடு. இது ஒவ்வொரு அரசியல்வாதியின் தனிப்பட்ட தேர்வு என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். 

இதையும் படிங்க: பொறுமையா இருங்க.. இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வரும்..!! செங்கோட்டையன் அட்வைஸ்..!!

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து பேசும்போது, செங்கோட்டையன் அவர்கள் முக்கியமாக இரு விஷயங்களை எடுத்துக்காட்டுகிறார். முதலில், புதிய அரசு பொறுப்பேற்ற சில மாதங்களில் எதிர்க்கட்சிகள் “ஆறு மாத காலத்திற்கு இந்த அரசை விமர்சிக்க மாட்டோம்” என்று கூறியதாகவும், பின்னர் உடனடியாக விமர்சனங்களைத் தொடங்கியதாகவும் சுட்டிக்காட்டுகிறார். மாற்றங்கள் உடனடியாக வராது, சில காலம் எடுக்கும் என்று விளக்கி உள்ளார். எம்ஜிஆர் ஜெயலலிதா படத்தைக் கூட வைக்க அனுமதிக்காதவர் இபிஎஸ் என்ற விமர்சித்தார்.

இதையும் படிங்க: #BREAKING: கோபிசெட்டிபாளையத்தில் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் வெற்றி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share