இன்னும் சரண்டரே ஆகல.. அதுக்குள்ளயா..? செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!
செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகக் கூறினார். பிறகு திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டார். திருநாவுக்கரசு இளையராஜாவிடம், “முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் பேசச் சொன்னார்கள்” என்று தொடங்கி, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தால் அல்லது ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பேரத்தில் ரூ.35 கோடி வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், மிரட்டல் கலந்த முயற்சிகளும் இருந்ததாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கைதானவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இருவருக்கும் போலீஸ் தரப்பில் சம்மன் கொடுக்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத இருவரும் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரின் முன் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இருவருக்கும் நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியது.
இதையும் படிங்க: கரூர் சம்பவம் செந்தில் பாலாஜிக்கு எப்படி தெரிஞ்சது..? அரசுப்பணி சரிதான்... அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!
இந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணை என்ற பெயரில் தங்களை துன்புறுத்தக் கூடாது என்று செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் மனு தாக்கல் செய்திருந்தனர். முன் ஜாமின் வழங்கப்பட்டு இதுவரை இருவரும் சரணடையாத பட்சத்தில் எப்படி துன்புறுத்தக் கூடாது என்று கேட்க முடியும் என்று நீதிமன்றம் காட்டமாக தெரிவித்தது. மனுவில் பொத்தாம் பொதுவாக உத்தரவு
கோரப்பட்டுள்ளது என்றும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிறகு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் மனுக்களை நிராகரித்து நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இதையும் படிங்க: உத்தமர் வேஷம் எடுபடாது 'Mr மெகா க்ளீன்'.. செந்தில் பாலாஜியை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்..!!